)
India Post offers Rs. 6000 scholarship ; அஞ்சல்தலை குறித்த விநாடி-வினா மற்றும் சமர்ப்பிக்கப்படும் அஞ்சல்தலை செய்முறை அடிப்படையில் அஞ்சல்தலை சேகரிப்பை பொழுதுபோக்காக கொண்டுள்ள கல்வியில் சிறந்து விளங்கும் 6 முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படவுள்ளது. போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் பள்ளியில் அஞ்சல் தலை சேகரிப்பு மையம் இருக்க வேண்டும். அதில் மாணவர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பள்ளியில் இந்த மையம் இல்லையெனில் மாணவர்களின் சுய அஞ்சல்தலை வைப்பு கணக்கு கருத்தில் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கான பிராந்திய அளவிலான எழுத்துப்பூர்வ விநாடி-வினா போட்டி 20.09.2025 அன்று நடத்தப்படவுள்ளது. இந்த விநாடி-வினா போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இறுதிப் போட்டிக்காக அஞ்சல் தலை செயல்முறையை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 25.08.2025 கடைசி நாளாகும். விண்ணப்பங்களை www.tamilnadupost.cept.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தமிழ்நாடு அஞ்சல் துறை வழங்கும் அஞ்சல் தலை சேகரிப்பு உதவித்தொகை!
யார் விண்ணப்பிக்கலாம்?
- 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்.
- கல்வியில் சிறந்து விளங்குபவர்கள்.
- அஞ்சல் தலை சேகரிப்பை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டவர்கள்.
உதவித்தொகை விவரம்: தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படும்.
தகுதி மற்றும் விதிமுறைகள்: மாணவர்கள் தங்கள் பள்ளியில் உள்ள அஞ்சல் தலை சேகரிப்பு மையத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். பள்ளியில் அத்தகைய மையம் இல்லையெனில், மாணவர்களின் தனிப்பட்ட அஞ்சல் தலை வைப்புக் கணக்கு (Philately Deposit Account) கணக்கில் கொள்ளப்படும்.
தேர்வு முறை:
1. பிராந்திய அளவிலான எழுத்துப்பூர்வ விநாடி-வினா போட்டி: இது 20.09.2025 அன்று நடைபெறும்.
2. அஞ்சல் தலை செய்முறை சமர்ப்பித்தல்: விநாடி-வினா போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் இறுதிப் போட்டிக்காக அஞ்சல் தலை குறித்த ஒரு செய்முறையை சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாள்: 25.08.2025
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய: www.tamilnadupost.cept.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஓய்வூதிய குறை தீர்க்கும் முகாம்
தமிழ்நாடு வட்ட அளவிலான ஓய்வூதிய குறை தீர்க்கும் முகாம்- II 24.09.2025 (புதன்கிழமை) அன்று பகல் 03:00 மணியளவில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் நேர்முகமாக நடைபெறவுள்ளது. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகம் , தமிழ்நாடு வட்டம் சென்னை-600002 என்கிற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ (அ) bgt.tn@indiapost.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ 01.09.2025 மதியம் 03:00 மணிக்குள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறை தலைவர் மாரியம்மா தாமஸ் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ