Monthly Income After Retirenment: மொத்த முதலீடு மூலம் வழக்கமான வருமானம் ஈட்ட விரும்புபவர்களுக்கு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சேமிப்பை முழுமையாகப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். இதில் முதலாவதாக, உங்கள் முழுப் பணமும் பாதுகாப்பாக இருக்கும், இரண்டாவதாக, ஒவ்வொரு மாதமும் 30,000 ரூபாய் தொடர்ந்து வருமானம் கிடைக்கும். உங்கள் வாழ் நாள் முழுவதும் அல்லடு நீங்கள் விரும்பும் வரை இந்த நன்மையைப் பெறலாம்.
தபால் அலுவலகத்தின 2 பிரபலமான திட்டங்களான மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) ஆகியவை முதலீட்டாளர்களுக்கு சிறந்த வருவாயுடன் 100% பாதுகாப்பான திட்டங்கள். ஏனெனில் ஓய்வுக்கு பிறகு , அதில் சிறந்த வகையில் மாதாந்திர வருமானம் பெறலாம்.
ஓய்வு காலத்திற்குப் பிறகு வழக்கமான வருமானத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் சுமார் ரூ.30,000 வருமானம் பெறலாம். ஓய்வு காலத்திற்கு பிற வழக்கமான வருமானம் பெற உதவும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதங்களும் அதிகமாக உள்ளன. அவற்றின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். எனினும், முதிர்வுக்குப் பிறகு அவற்றை, நீங்கள் விரும்பும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
SCSS: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
அஞ்சல் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) வைப்புத்தொகையின் அதிகபட்ச வரம்பை அரசாங்கம் ரூ.30 லட்சமாக உயர்த்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வட்டி விகிதம் தற்போது 8.02 சதவீதமாக உள்ளது. இது காலாண்டு அடிப்படையில் முதலீட்டாளரின் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
அதிகபட்ச வைப்புத்தொகை: ரூ.30 லட்சம்
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 8.02 சதவீதம்
முதிர்வு காலம்: 5 ஆண்டுகள்
காலாண்டு வட்டி: ரூ.60,150
மாதாந்திர வட்டி: ரூ.20,050
ஆண்டு வட்டி: ரூ.2,40,600
5 ஆண்டுகளில் கிடைக்கும் மொத்த வட்டி: ரூ.12,03,000
POMIS: மாதாந்திர வருமானத் திட்டம்
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்திற்கான (POMIS) ஒரு நபர் கணக்கில் வைப்புத்தொகையின் அதிகபட்ச வரம்பு ரூ.9 லட்சம். நீங்கள் உங்கள் மனைவியுடன் கூட்டுக் கணக்கைத் திறந்தால், இந்த வரம்பு ரூ.15 லட்சம். இந்தத் திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4 சதவீதம். இதில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கான வருடாந்திர வட்டி 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அது ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கிற்கு வந்து சேரும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள், ஆனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வட்டி விகிதத்தின்படி நீட்டிக்கப்படலாம்.
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.4 சதவீதம்
கூட்டுக் கணக்கிலிருந்து அதிகபட்ச முதலீடு: ரூ.15 லட்சம்
ஆண்டு வட்டி: ரூ.1,11,000
மாதாந்திர வட்டி: ரூ.9250
SCSS மற்றும் POMIS திட்டத்திலிருந்து கிடைக்கும் மாத வருமானம்
அஞ்சல் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் மாதாந்திர வட்டி ரூ.20,050 ஆக இருக்கும். அதே நேரத்தில், மாதாந்திர வருமானத் திட்டத்தில், மனைவியின் உதவியுடன், நீங்கள் ரூ.9250 மாதாந்திர வட்டியைப் பெறலாம். இது சம்பந்தமாக, மொத்த மாதாந்திர வட்டி ரூ.29,300 (20,050 + 9250) சுமார் ரூ.30,000 என்ற அளவில் இருக்கும்.
மேலும் படிக்க | 300 மில்லியன் டாலர் மோசடி அம்பலம்: இந்த தளத்தில் TV நிகழ்ச்சிகளை பார்ப்பவர்கள் உஷார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









