Accident Insurance Scheme: மத்திய அரசின் கீழ் செயல்படும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் என்பது ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களுக்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட மிகவும் பயனுள்ள திட்டங்களில் ஒன்றாகும்.

Pradhan Mantri Suraksha Bima Yojana In Tamil: மத்திய அரசு மக்களின் எதிர்காலம் கருதி பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் வரிசையில் மிகவும் பயனுள்ள மத்திய அரசின் ஒரு திட்டத்தைப் பற்றிய தகவல்களை குறித்துக் தெரிந்துக்கொள்ளுவோம். அதாவது ரூ.20 பிரீமியம் செலுத்துவதன் மூலம் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்.
பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்றால் என்ன?
இது மத்திய அரசின் "பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா" (PMSBY). இது ஒரு விபத்து ஆயுள் காப்பீட்டுத் திட்டம். இந்தத் திட்டத்தில் பதிவுசெய்த பிறகு, ஒருவர் ஆண்டுக்கு ரூ.20 பிரீமியத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.
காப்பீட்டுத் திட்டத்தில் எவ்வளவு பிரியம் செலுத்த வேண்டும்?
2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட PMSBY திட்டத்தின் மூலம் வருடத்திற்கு வெறும் ₹20 பிரீமியம் செலுத்தி ₹2 லட்சம் வரை விபத்து காப்பீட்டுத் தொகையை பெறலாம். குறைந்த வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு விபத்து ஏற்பட்டால் நிதி உதவி வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
PMSBY காப்பீட்டுத் திட்டத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும்?
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ், காப்பீட்டுக் காலத்தில் பாலிசிதாரர் துரதிர்ஷ்டவசமாக இறந்தால், அவரது நாமினிக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
PMSBY காப்பீட்டுத் திட்டத்தில் ஊனமுற்றால் எவ்வளவு தொகை கிடைக்கும்?
அதே நேரத்தில், இந்தத் திட்டத்தின் கீழ், பாலிசிதாரருக்கு விபத்தின் மூலம் பகுதியளவு ஊனமுற்றால் அவருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி
அதே நேரத்தில், பாலிசிதாரர் விபத்து மூலம் முற்றிலும் ஊனமுற்றவராக இருந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் அவருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சரியான நேரத்தில் நிதி உதவி கிடைப்பதை இந்த திட்டம் உறுதி செய்கின்றன.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம்
இந்தத் திட்டத்தின் கீழ் இன்றே உங்கள் காப்பீட்டைச் செய்து கொள்ள வேண்டும். அவசர காலங்களில் குறைந்த செலவு மற்றும் அதிக சலுகைகளுடன், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களுக்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட மிகவும் பயனுள்ள திட்டங்களில் ஒன்றாகும். நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் இன்னும் காப்பீடு செய்யப்படவில்லை என்றால், இப்போதே விண்ணப்பித்து நிதிப் பாதுகாப்பைப் பெறுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ