)
LIC Bima Sakhi Yojana: நாட்டின் பெண்களை நிதி ரீதியாக தன்னிறைவு பெறச் செய்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், மத்திய அரசு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (LIC) இணைந்து பீமா சகி யோஜனாவைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் குறிப்பாக வேலை செய்ய விருப்பம் இருந்தாலும், அதற்கான வழிமுறைகளோ வாய்ப்புகளோ இல்லாத பெண்களுக்கான மிகச் சிறந்த திட்டம்.
பெண்களுக்கான இந்தத் திட்டம் டிசம்பர் 9, 2024 அன்று தொடங்கப்பட்டது, இதுவரை இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. செவ்வாயன்று, நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளதாகவும், அவர்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.7,000 சம்பாதித்து வருவதாகவும் தெரிவித்தார்.
பீமா சகி திட்டத்தின் குறிக்கோள் மற்றும் நன்மைகள்
LIC பீமா சகி திட்டத்தின் முக்கிய நோக்கம், காப்பீட்டுத் துறையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாகும். இதன் கீழ், பயிற்சி பெற்ற பெண்கள் LIC என்னும் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் முகவர்களாக பணியாற்றலாம். இந்தத் திட்டம் வேலைவாய்ப்பை வழங்குவது மட்டுமல்லாமல், பெண்களுக்கு நிதி கல்வியறிவையும் வழங்குகிறது.
எல்ஐசி திட்டத்தில் இணைய யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பீமா சகி திட்டத்தில் விண்ணப்பிக்க சில அடிப்படைத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பெண் விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும், அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பெண் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும், மேலும் ஆதார், பான் கார்டு மற்றும் குடியிருப்புச் சான்று போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு கிடைக்கும் உதவித்தொகை
பீமா சகி திட்டத்தின் கீழ், பெண் முகவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை (பயிற்சி உதவித்தொகை) வழங்கப்படுகிறது. இதில், முதல் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.7,000, இரண்டாம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.6,000, மூன்றம் ஆண்டில் மாதம் ரூ.5000 வழங்கப்படுகிறது. அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் கமிஷன்களும் கிடைக்கும்.
எல்ஐசி அதிகாரிகளாக உயரும் வாய்ப்பு
பயிற்சி காலம் முடிந்ததும், பீமா சகிகள் எல்.ஐ.சி காப்பீட்டு முகவர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இது ஆயுள் காப்பீட்டு பலிசிகளின் வரம்பை விரிவுபடுத்தவும் கிராமப்புற குடும்பங்களுக்கு அதிக நிதி பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவுகிறது. எல்.ஐ.சி மேம்பாட்டு அதிகாரிகள் போன்ற உயர் பதவிகளுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும் அவர்கள் பெறுகிறார்கள்.
2025-26 ஆம் ஆண்டிற்கு ரூ.520 கோடி வழங்க திட்டம்
நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், 2024-25 நிதியாண்டில் பீமா சாகி திட்டத்திற்கு ரூ.62.36 கோடி வழங்கப்பட்டது. அதே நேரத்தில், எல்ஐசி 2025-26 ஆம் ஆண்டிற்கு ரூ.520 கோடி பட்ஜெட்டை நிர்ணயித்துள்ளது. இதில், ஜூலை 14 வரை ரூ.115.13 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் அரசாங்கம் இந்தத் திட்டத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது மற்றும் அதை மேலும் பெண்களிடம் சென்றடைய முயற்சிக்கிறது.
எல்ஐசி பீமா சகி திட்டத்தில் இணைய விண்ணப்பிக்கும் முறை
எல்ஐசி பீமா சகி திட்டத்தில் சேர விரும்பும் பெண்கள் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
1. முதலில் எல்ஐசியின் வலைத்தளத்திற்குச் செல்லவும்.
2. அங்குள்ள "Apply for Bima Sakhi Yojana" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3. ஒரு புதிய படிவம் திறக்கும், அதில் மாநிலம் மற்றும் மாவட்டம் உள்ளிட்ட பிற தேவையான தகவல்கள் நிரப்பப்பட வேண்டும்.
4. தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி படிவத்தை சமர்ப்பிக்கவும்.
5. படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, மொபைலில் உறுதிப்படுத்தல் செய்தி வரும்.
தேவையான ஆவணங்கள் விபரம்
ஆதார் அட்டை, குடியிருப்புச் சான்றிதழ், பான் அட்டை, 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அல்லது சான்றிதழ், மொபைல் எண் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ