Government Employees And Pensioners News: 2025 ஆம் ஆண்டு மே மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு சம்பந்தமாக வெளியான புதிய அறிவிப்பு குறித்து விவரங்களை பார்க்கலாம். மே மாதத்தில் எந்த வகையை சார்ந்த அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயரப்போகுது? எதன் காரணமாக சம்பள உயர்வு இருக்கும்? போன்ற விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
அகவலைப்படி உயர்வு, அரியர் தொகை மத்திய அரசு ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வுதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையில் உள்ள அகவலைப்படி உயர்வு மற்றும் அரியர் தொகையை வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. மே மாதம் வழங்கப்பட உள்ள சம்பளத்தில் இந்த அரியர் பணமானது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 8.5 லட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு மத்திய அரசு இந்த பணத்தை வழங்கும்.
8.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவலைப்ப டிஏ 42லிருந்து 46% ஆக உயர்த்தப்பட்டது. ஜனவரி 1, 2025 முதல் இது அமலுக்கு வந்தது. 2025 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நிலுவையில் உள்ள இந்த நான்கு மாதத்திற்கான அரியர் தொகை மே மாதம் சம்பளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. 8.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள். இது ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.
யாருக்கு சம்பள உயர்வு இருக்கும்?
மத்திய அரசு ஊழியர்களை பொறுத்தவரை குரூப் ஏ, பி, சி மற்றும் மத்திய மத்திய ஆயுத காவல்படை (CAPF) பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர். பாதுகாப்பு சேவைகளில் இருக்கும் சிவில் ஊழியர்கள், மத்திய அரசின் ஊதிய கட்டமைப்பின் கீழ் தன்னாட்சி அமைப்பு ஊழியர்களின் சம்பளம் ரூ.720 முதல் ரூ.3150 வரை உயரும். எனவே மத்திய அரசின் முடிவின் காரணமாக பல்வேறு துறையில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூ பெற்றவர்களுக்கு பலன்கள் கிடைக்கும்.
டிஏ நிலுவை தொகை எவ்வாறு கணக்கிடப்படும்?
நிலுவையில் உள்ள மாதங்களின் அடிப்படையில் ஊதியம் மற்றும் இதுவரையில் வாங்கிய டிஏ, இனி வாங்கப்போகும் டிஏ இடையிலான வேறுபாடு ஆகியவற்றை வைத்து டிஏ நிலுவை தொகை கணக்கிடப்பட்டு வருகிறது.
உதாரணம்:
டிஏ நிலுவை தொகை = (புதிய டிஏ % - பழைய டிஏ %)
அடிப்படை ஊதியம் * மாதங்களின் எண்ணிக்கை
அடிப்படை ஊதியம்: ரூ. 35,400
டிஏ உயர்வு : 4%
டிஏ நிலவை தொகை: 4 மாதங்கள் (ஜனவரி முதல் ஏப்ரல்)
அரியர் தொகை எவ்வளவு எனப்பார்த்தால், = 04*35400*4 = ரூ.5,664
இந்த எளிய கணக்கீட்டு முறையை பயன்படுத்தி ஒவ்வொரு பணியாளரும் தங்களுடைய அரியர் தொகையை கணக்கிட்டு கொள்ளலாம்.
மே மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்
புதிய டிஏ விதத்துடன் திருத்தப்பட்ட சம்பளம் மே மாத சம்பளத்தில் வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்தது. முந்தைய மாதம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை நிலுவை தொகை மொத்தமாக வழங்கப்படும். இதன் காரணமாக மே மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்..
மேலும் படிக்க - தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு எப்போது? ஸ்டாலினின் ஐடியா என்ன?
மேலும் படிக்க - 8வது ஊதியக்குழு: HRA கணக்கீட்டில் மாற்றம்? ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு?
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் டிஏ உயர்வு மற்றும் அரியர் தொகை மூலம் ஊதிய உயர்வு குறித்து சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகின்றன.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ