Petrol Pump Bans Digital Payments : ஒவ்வொரு நாளும் இந்தியாவில் சாலைகளில் கோடிக்கணக்கான வாகனங்கள் ஓடுகின்றன. பல்வேறு வகையான வாகனங்கள் இருக்கும் இந்தியாவில் பெரும்பாலானவை பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்குகின்றன. இதனால்,நாட்டில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாகிறது. பெட்ரோல் டீசல் மட்டும் ஒருநாள் இல்லையென்றால் இந்தியாவின் பொருளாதாரமே ஸ்தம்பித்துவிடும். அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பெட்ரோல் டீசல் வாங்க இப்போது டிஜிட்டல் பேமெண்ட்ஸூம் செய்யலாம். அதாவது, பில்லுக்கான தொகையை ஆன்லைனிலேயே செலுத்தலாம்.
முன்பெல்லாம் பெட்ரோல் மற்றும் டீசல் அடித்தபிறகு பணம் செலுத்தும் இடத்தில், மக்கள் ரொக்கமாக மட்டுமே பணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், இப்போது மக்களுக்கு டிஜிட்டல் முறையிலும் பணம் செலுத்தலாம். ஆனால் இனிமேல், இந்த நகரத்தில் மட்டும் பெட்ரோல் டீசலை நிரப்ப ஆன்லைனில் பணம் செலுத்த முடியாது. பணம் இல்லாமல் இங்கு பெட்ரோல் கிடைக்காது. இந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நாக்பூரில் பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்காது
நீங்கள் நாக்பூரில் வசிப்பவராக இருந்து, நீங்கள் தினமும் கார், பைக் உள்ளிட்ட வாகனத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்புவது தொடர்பாக நாக்பூரில் உள்ள பெட்ரோல் பம்புகள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி செய்துள்ளன. உண்மையில், விதர்பா பெட்ரோலியம் டீலர் சங்கம் 10 ஆம் தேதிக்குப் பிறகு எந்த பெட்ரோல் பம்பும் உங்களுக்கு ஆன்லைன் கட்டணம் செலுத்தும் வசதியை வழங்காது என்று அறிவித்துள்ளது.
இந்த முடிவு எடுக்கப்பட்டது ஏன்?
நாடும் உலகமும் நவீனத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அரசாங்கமே டிஜிட்டல் பணம் செலுத்துதலை ஊக்குவித்து வருகிறது. ஆனால் இப்போது நாக்பூரில் உள்ள பெட்ரோல் பம்புகளில் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் செலுத்துவது சாத்தியமில்லை. உண்மையில், சைபர் மோசடி மற்றும் வங்கிக் கணக்கு பறிமுதல் போன்ற சம்பவங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, விதர்பா பெட்ரோலியம் டீலர் சங்கத் தலைவர் அமித் குப்தா கூறுகையில், பல முறை சைபர் குற்றவாளிகள் போலி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் பெட்ரோல் நிரப்புகிறார்கள்.
இதற்குப் பிறகு, தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளித்து அவர்களின் கணக்கை முடக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் பம்ப் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகள் கூட முடக்கப்பட்டுள்ளன. இது அவர்களின் வணிகத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, இப்போது ரொக்கமாக பணம் செலுத்தும் ஆப்சனை மட்டுமே இனி வழங்குவோம் என அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | இந்தியா–பாகிஸ்தான் போர் பதட்டத்தின் தாக்கமாக தங்கம் விலை அதிரடியாக குறைந்தது!
மேலும் படிக்க | SIP vs NPS: மாதம் ரூ.7000 முதலீட்டை... ரூ.1.1 கோடியாக பெருக்க உதவும் திட்டம் எது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ