)
scholarship : இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் 8 ஆம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில், தற்போது செப்டம்பர் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தகுதி வாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான விண்ணப்ப பதிவு https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் ஜூன் 2 முதல் தொடங்கியது.
இந்த வெப்சைட்டில் மாணவர்கள், முதலில் ஒரு முறை பதிவை நிறைவு செய்து அதன் பிறகு கல்வி உதவித் தொகை திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த முழு விவரங்களை https://scholarships.gov.in/studentFAQs என்ற இணையப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தொடக்கக் கல்விக்கு பிறகு இடைநிற்றலை தவிர்ப்பதற்காக தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை மூலம் இந்த தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். 2025-2026 ஆம் ஆண்டிற்கு உதவித் தொகைபெற விண்ணப்பிக்க உள்ள மாணவர்களின் பெற்றோரது உச்சகட்ட வருமான வரம்பு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது.
புதுப்பித்தல் :
இத்திட்டத்தின் கீழ் கடந்தநிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் (National Scholarship Portal) Renewal Application என்ற இணைப்பில் (Link) சென்று கடந்த ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்பதிவு செய்து 2025-2026 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பித்தினை புதுப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
புதியவர்கள்
இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள், முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும். எனவே 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகைத்தளத்தில் (National Scholarship Portal) New Registration என்ற இணைப்பில் (Link) சென்று தங்களது விபரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெறப்படும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவுகளை Fresh Application என்ற இணைப்பின் கீழ் பதிவு செய்து உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து இத்திட்டத்தின் கீழ் பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள்அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) மற்றும் (http://socialjustice.gov.in) என்ற மத்திய அரசின் சமூக நீதி அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை அணுகி கல்வி உதவித்தொகை தொடர்பான கூடுதல் தகவல்களை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ