)
Lay Off Rules : மத்திய அரசு புதிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் இருக்கும் ஒரு விதிமுறை நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், ஊழியர்களுக்கு ஆபத்தானதாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது, இதுவரை நடைமுறையில் இருந்த ஊழியர்கள் பணிநீ நீக்க விதிமுறையில் இப்போது மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 299 ஊழியர்கள் வரை பணி நீக்க செய்ய அரசின் அனுமதி பெறத் தேவையில்லை. முன்பு 100 ஊழியர்கள் வரை மட்டுமே பணி நீக்கம் செய்யும்போது அரசின் அனுமதி பெற தேவையில்லை என்ற விதிமுறை இருந்தது. ஆனால், இப்போது வந்திருக்கும் விதிமுறை தொழிலாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த விதிமுறை, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறினாலும், பல தொழிலாளர் அமைப்புகள் இது குறித்து கவலை தெரிவித்துள்ளன.
வீட்டிலிருந்து வேலைக்கு அங்கீகாரம்
அதே நேரத்தில் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டம் அங்கீகாரம் கொடுத்துள்ளது. கோவிட்-19 க்குப் பிறகு வீட்டிலிருந்து வேலை செய்வது பொதுவானதாகிவிட்டது, ஆனால் அதற்குக் முன்பு குறிப்பிட்ட சட்ட விதிகள் இல்லை. புதிய தொழிலாளர் குறியீடு இந்த WFH ஏற்பாட்டை முறையாக அங்கீகரிக்கிறது. நிறுவனங்கள் இப்போது ஊழியர்களுடன் பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையைச் செயல்படுத்த முடியும்.
பெண்கள் இரவு ஷிப்டில் வேலை செய்யலாம்
புதிய விதிகளின் கீழ், பெண்களுக்கு இரவு ஷிப்டுகளில் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்பு பல மாநிலங்களில் இது தடை செய்யப்பட்டிருந்தது. இப்போது, போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட பெண்ணின் ஒப்புதலுடன், அவர்கள் இரவில் வேலை செய்ய முடியும். இது தகவல் தொழில்நுட்பம் (IT), உணவு விநியோகம், மின் வணிகம் (E-Commerce) மற்றும் உற்பத்தித் துறைகளில் பெண்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம்
நாட்டில் உள்ள ஒவ்வொரு தொழிலாளிக்கும் இப்போது குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுவதற்கான உரிமை சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் அமைப்புசாரா துறையில் ஊதியங்கள் தன்னிச்சையாக நிர்ணயிக்கப்பட்டன. இப்போது அவர்களும் குறைந்தபட்ச ஊதிய முறையின் கீழ் கொண்டு வரப்படுவார்கள்.
கிக் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு
Zomato, Swiggy, Ola, Uber போன்ற விநியோகம் மற்றும் வண்டிச் சேவைகளில் பணிபுரியும் கிக் தொழிலாளர்களுக்கு (Gig Workers) முதல் முறையாக சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு இவர்களுக்காக ஒரு சமூகப் பாதுகாப்பு நிதியை உருவாக்கும். இந்த நிதி அவர்களுக்குச் சுகாதாரம், ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் முதியோர் சலுகைகளை (Retirement Benefits) வழங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ