)
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சில மாநிலங்கள் இதை அமல்படுத்திவிட்டன. எனினும், மத்திய அரசு ஊழியர்கள் இன்னும் இதற்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வராது: அமைச்சர்
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த எதிர்பார்ப்புகள் தொடரும் இவ்வேளையில், தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மக்களவையில் நிதி அமைச்சர் கூறியது என்ன?
“தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவது குறித்து இந்திய அரசின் பரிசீலனையில் எந்த திட்டமும் இல்லை” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். “அரசாங்க கருவூலத்தில் நீடித்த நிதிப் பொறுப்பு” காரணமாக OPS -ஐ மீண்டும் கொண்டு வரும் எண்ணத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டதாக நிதியமைச்சர் விளக்கினார்.
National Pension System: NPS என்றால் என்ன?
- NPS என்பது ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்காக (ஆயுதப்படைகளில் உள்ளவர்களைத் தவிர) அறிமுகப்படுத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டமாகும்.
- தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள ஊழியர்களுக்கான ஓய்வூதிய சலுகைகளை மேம்படுத்த, NPS இல் மாற்றங்களை பரிந்துரைக்க அப்போதைய நிதிச் செயலாளரின் கீழ் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது.
- பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்களின் அடிப்படையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) NPS கட்டமைப்பிற்குள் ஒரு விருப்பமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
NPS இன் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு வரையறுக்கப்பட்ட சலுகைகளை வழங்கும் நோக்கத்துடன் UPS கொண்டுவரப்பட்டதாக நிர்மலா சீதாராமன் கூறினார். குடும்பத்தின் வரையறை உட்பட UPS இன் அம்சங்கள், "உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தப்படுவதை உறுதிசெய்யும் அதே வேளையில் UPS நிதியின் நிதி நிலைத்தன்மையையும் பராமரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Unified Pension Scheme: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட அம்சங்கள்
- NPS இன் கீழ் UPS ஐத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்கள், பணியின் போது மரணம் அல்லது இயலாமை அல்லது ஊனம் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டால், CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021 அல்லது CCS (அசாதாரண ஓய்வூதியம்) விதிகள், 2023 இன் கீழ் சலுகைகளுக்குத் தகுதி பெறுவார்கள்.
- ஜனவரி 24, 2025 அன்று அரசாங்கம் UPS ஐ முறையாக அறிவித்தது.
- இந்தத் திட்டத்தின் கீழ், பணி ஓய்வுக்கு முன் வாங்கிய பன்னிரண்டு மாத சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியான ஓய்வூதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஊழியர் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையை புரிந்திருக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கும் குறைவான சேவை உள்ளவர்களுக்கு, ஓய்வூதியம் விகிதாசாரமாகக் குறைக்கப்படும்.
NPS இன் கீழ் வரையறுக்கப்பட்ட நன்மை என்ற கட்டமைப்பை அறிமுகப்படுத்தி, பழைய ஓய்வூதியத் திட்டத்துடன் தொடர்புடைய நிதிச் சுமை இல்லாமல் ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ