PM Internship Scheme 2025: மாதம் ரூ.5,000 ஸ்டைபண்ட், ரூ.6,000 மானியம்.... விண்ணப்பிப்பது எப்படி?

PM Internship Scheme 2025: பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் என்பது இளம் நிபுணர்களுக்கு மதிப்புமிக்க இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு அரசாங்க முயற்சியாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 6, 2025, 09:56 AM IST
  • பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் 2025 என்றால் என்ன?
  • இதில் எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும்?
  • இதற்கு தேவையான தகுதி என்ன?
PM Internship Scheme 2025: மாதம் ரூ.5,000 ஸ்டைபண்ட், ரூ.6,000 மானியம்.... விண்ணப்பிப்பது எப்படி?

PM Internship Scheme 2025: இந்திய அரசின் பெருநிறுவன விவகார அமைச்சகம், பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் 2025 -க்கான ஆன்லைன் பதிவுகளை அதிகாரப்பூர்வ PMIS போர்ட்டலில் திறந்துள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் பதிவு செயல்முறையை முடிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி மார்ச் 12, 2025 ஆகும். pminternship.mca.gov.in. என்ற தளத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

Add Zee News as a Preferred Source

What is PM Internship Scheme 2025: பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் 2025 என்றால் என்ன?

பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் என்பது இளம் நிபுணர்களுக்கு மதிப்புமிக்க இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு அரசாங்க முயற்சியாகும். சிறந்த 500 நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப்களை வழங்கி, அதன் மூலம் கல்வி கற்றலுக்கும் நிஜ உலக அனுபவத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்காக ரூ.800 கோடி ஒதுக்கீட்டை அறிவித்தார். இது அக்டோபர் 3, 2024 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

Stipend in PM Internship Scheme 2025: இதில் எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும்

ஒவ்வொரு இன்டர்ணுக்கும் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, ரூ.5,000 மாதாந்திர நிதி உதவியும், ரூ.6,000 ஒரு முறை மானியமும் வழங்கப்படும். இந்த ஆதரவு நிதிக் கட்டுப்பாடுகளைத் தணித்து PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பங்கேற்பதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் 2025: இதற்கு தேவையான தகுதி என்ன?

10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது 21 முதல் 24 வயதுக்குட்பட்ட UG/PG பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற மாணவர்கள், இந்த போர்ட்டலில் இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வருமானம்: உங்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் (சுய வருமானம், மனைவி அல்லது பெற்றோர்) ரூ. 8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பணி நிலை: விண்ணப்பதாரர்கள் முழுநேர வேலையில் இருக்கக்கூடாது அல்லது முழுநேர கல்வியில் சேரக்கூடாது.

பயிற்சி காலம்: இன்டர்ண்ஷிப் பயிற்சிகாலம் ஒரு வருடம் (12 மாதங்கள்). வேறு எந்த தொழில்முறை உறுதிப்பாடுகளும் இல்லாமல் மதிப்புமிக்க அனுபவத்தைப் பெற உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், தற்போது முழுநேர வேலை செய்யாத அல்லது படிக்காதவர்களுக்கு இந்த வாய்ப்பு சரியானதாக இருக்கும்.

எம் இன்டர்ன்ஷிப் திட்டம் 2025: விண்ணப்பிக்கும் முறை

- ஸ்டெப்  1: முதலில் pminternship.mca.gov.in இல் உள்ள PMIS அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

- ஸ்டெப் 2: முகப்புப் பக்கத்தில் உள்ள பதிவு இணைப்பைக் கிளிக் செய்து பதிவு செய்ய தேவையான விவரங்களை வழங்கவும்.

- ஸ்டெப் 3: பதிவின் போது பெறப்பட்ட சான்றுகளைப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.

- ஸ்டெப் 4: போர்ட்டலில் உள்ள அறிவுறுத்தல்களின்படி பதிவு படிவத்தை கவனமாக நிரப்பவும்.

- ஸ்டெப் 5: படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

- ஸ்டெப் 6: எதிர்கால குறிப்புக்காக உறுதிப்படுத்தல் பக்கத்தின் நகலை சேவ் செய்து வைக்கவும்.

மேலும் படிக்க | EPS Pension: PF உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 7 வகையான இபிஎஸ் ஓய்வூதியம்... முழு லிஸ்ட் இதோ

மேலும் படிக்க | UPS vs NPS vs OPS: மூன்றுக்கும் உள்ள வேறுபாடு என்ன? UPS ஓய்வூதிய கணக்கீடு என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News