PM Internship Scheme: மாணவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை... ஏப்ரல் 22 வரை விண்ணப்பிக்கலாம்

PM Internship Scheme: பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் கடந்த 2024 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 2024-25 நிதியாண்டில் 1.25 லட்சம் இளைஞர்களுக்கும் அடுத்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் அக்டோபர் 3, 2024 அன்று தொடங்கப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 17, 2025, 02:17 PM IST
  • பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் விண்ணப்பிக்க மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு.
  • PM இன்டர்ன்ஷிப் திட்டம் குறித்த விபரங்கள்.
  • PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான தகுதி அளவுகோல்கள்.
PM Internship Scheme: மாணவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை... ஏப்ரல் 22 வரை  விண்ணப்பிக்கலாம்

PM Internship Scheme: பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் கடந்த 2024 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 2024-25 நிதியாண்டில் 1.25 லட்சம் இளைஞர்களுக்கும் அடுத்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் அக்டோபர் 3, 2024 அன்று தொடங்கப்பட்டது. இந்நிலையில், பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தில் (PMIS) இணைவதற்கான காலக்கெடுவை கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (MCA) மீண்டும் நீட்டித்துள்ளது. மாணவர்கள் இப்போது ஏப்ரல் 22 வரை தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் விண்ணப்பிக்க மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு

தொடக்கத்தில் மார்ச் 12 ஆம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த இந்த காலக்கெடு முதலில் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது மீண்டும் ஏப்ரல் 22 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதார்கள் அதிகாரப்பூர்வ PM இன்டர்ன்ஷிப் வலைத்தளம் (pminternship.mca.gov.in) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில், ஒவ்வொரு இன்டர்ணுக்கும் உதவித்தொகையாக மாதம் ரூ.5000 வழங்கப்படும். இது தவிர, அரசு சார்பில், ரூ.6000 வழங்கப்படும்.

PM இன்டர்ன்ஷிப் திட்டம் குறித்த விபரங்கள்

அக்டோபர் 3, 2024 அன்று தொடங்கப்பட்ட பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தில் (PMIS), சிறந்த 500 நிறுவனங்களில் இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் இந்த முதன்மையான முயற்சி, இளைஞர்கள் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள உதவும்நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் நேரடி அனுபவத்தைப் பெற இது ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான தகுதி அளவுகோல்கள் 

1. விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

2. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் கடைசி தேதியின்படி 21 முதல் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

3. விண்ணப்பதாரர்கள் முழுநேர வேலைவாய்ப்பு அல்லது முழுநேர கல்வி திட்டத்தில் பயில்பவராக இருக்கக் கூடாது. இருப்பினும், தொலைதூரக் கல்வி அல்லது ஆன்லைன் கற்றல் திட்டங்களில் சேர்ந்தவர்கள் தகுதியுடையவர்கள்.

4. விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில் எந்த உடனடி குடும்ப உறுப்பினரும் நிரந்தர அரசாங்க பதவியை வகிக்கக்கூடாது.

PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி

கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் ஏதேனும் ஒரு வகையில் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்

1. 10 ஆம் வகுப்பு (SSC) அல்லது 12 ஆம் வகுப்பு (HSC)

2. மேல்நிலைப் பள்ளிச் சான்றிதழ் (SSC) அல்லது அதற்கு இணையான கல்வியை பெற்றவர்கள்

3. உயர்நிலைச் சான்றிதழ் (HSC) அல்லது அதற்கு இணையான சான்றிதழ் பெற்றவர்கள்

4. பாலிடெக்னிக் நிறுவனத்தில் டிப்ளமோ படிப்பு

5. தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் (ITI) சான்றிதழ் 

6. UGC அல்லது AICTE-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் BA, B.Sc, B.Com, BCA, BBA, B.Pharma போன்ற பட்டங்கள்.

PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை

1. pminternship.mca.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

2. பதிவு இணைப்பைக் கிளிக் செய்து OTP சரிபார்ப்புக்கு உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும், அதைத் தொடர்ந்து கணக்கை உருவாக்க தேவையான தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை வழங்கவும்.

3. பதிவின் போது உருவாக்கப்பட்ட சான்றுகளைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழையவும்.

4. தேவையான தகவல்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, ஆதார் அட்டை மற்றும் கல்விச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களைப் பதிவேற்றவும்.

5. ஐந்து இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

6. எதிர்கால குறிப்புக்காக உறுதிப்படுத்தல் பக்கத்தைச் சேமித்து அச்சிடவும்.

7. அதன் பிறகு உங்கள் தகுதியின் அடிப்படையில் நீங்கள் எங்கு இன்டர்ன்ஷிப் செய்யலாம் என்று முடிவு செய்யப்படும்.

மேலும் படிக்க | ரயில்வேயில் 9,970 காலிபணியிடங்கள்... டிப்ளமோ முடித்தாலே சூப்பர் வேலை - எப்படி விண்ணப்பிப்பது?

மேலும் படிக்க | ரீல்ஸ் மோகத்தால் சிறுவர்களின் கல்வி பாதிப்பு..சமூக ஊடகங்களில் சிக்கிய மாணவர்களின் தற்போதைய நிலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News