PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்டம் என்பது இந்தியா முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மிகவும் தேவையான நிதி உதவியை வழங்கும் ஒரு அரசாங்க முயற்சியாகும். இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 பெறுகிறார்கள். இது ரூ.2,000 என்ற மூன்று எளிய தவணைகளில் செலுத்தப்படுகிறது. இது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செல்கிறது.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
விவசாயிகள் பிப்ரவரி 2025 இல் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நேரடி வங்கி பரிமாற்றம் (DBT) மூலம் 19வது தவணையில் ரூ.2,000 ஐப் பெற்றனர். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிஎம் கிசான் தொகை செலுத்தப்படுவதால், அடுத்த தவணையான 20வது தவணை ஜூன் 2025 இல் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
PM Kisan: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா
அடுத்த PM Kisan தவணை உங்களுக்குக் கிடைக்குமா என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது?
அதற்கான எளிய செயல்முறை இதோ:
- pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
- 'Know Your Status’ என்பதைக் கிளிக் செய்யவும் (வலது பக்கத்தில் அதைக் காண்பீர்கள்)
- அதன் பிறகு உங்கள் பதிவு எண்ணையும் கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிடவும்
- ‘Get Data’ என்பதைக் கிளிக் செய்யவும்
- உங்கள் பயனாளி நிலை (beneficiary status) திரையில் காண்பிக்கப்படும்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா: இதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
- இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முதலில் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்
- 'புதிய விவசாயி பதிவு' (New Farmer Registration’) என்பதைக் கிளிக் செய்யவும்
- உங்கள் ஆதார் எண்ணையும் கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிடவும்.
- தேவையான விவரங்களை நிரப்பி, தொடர 'ஆம்' என்பதைக் கிளிக் செய்யவும்
- PM-Kisan விண்ணப்பப் படிவம் 2024 ஐ பூர்த்தி செய்து, அதைச் சேமித்து, உங்கள் எதிர்கால பயன்பாடுகளுக்கான பிரிண்ட் அவுட்டை எடுத்துக்கொள்ளவும்.
PM Kisan: இந்த திட்டங்களின் சலுகைகள் யாருக்கு கிடைக்கும்?
- இந்த திட்டத்தின் சலுகைகளை பெற பயனாளி இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- சொந்தமாக சாகுபடி செய்யக்கூடிய விவசாய நிலம் அவரிடம் இருக்க வேண்டும்.
- சிறு அல்லது குறு விவசாயியாக இருக்க வேண்டும்
- மாதத்திற்கு ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறும் பணி ஓய்வு பெற்ற நபராக இருக்கக்கூடாது.
முக்கிய தகவல்
பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணையை பெற விவசாயிகள் சில விஷயங்களை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். eKYC, நிலப் பதிவுகளின் சரிபார்ப்பு, வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைத்தல் மற்றும் NPCI DBT விருப்பத்தை ஆக்டிவேட் செய்தல் ஆகியவற்றை நிறைவு செய்து முடித்த விவசாயிகளுக்குதான் பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவது நல்லது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ