)
முதலீட்டில் எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு எவ்வளவு காலம் முதலீடு செய்கிறீர்கள் என்பதும் முக்கியம். குறிப்பாக, நீண்ட காலம் முதலீட்டின் தான் கூட்டுவட்டி வருமானத்தின் பலனை அதிகபட்சம் பெறலாம். உங்கள் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானமும் முதலீடாக மாறி பணத்தை பன்மடங்காக்குகிறது.
இளமையிலேயே முதலீடு செய்வதன் நன்மைகள்
இளமையிலேயே முதலீடு செய்வதன் நன்மையை ஒரு உதாரணத்துடன் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். நீங்கள் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அதில் உங்களுக்கு ஆண்டுதோறும் 12 சதவீத வருமானம் கிடைப்பதாக வைத்துக் கொண்டால், எத்தனை ஆண்டுகளுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் புரிந்து கொள்வோம்.
20 வயதில் செய்த முதலீட்டில் அதிக லாபம்
நீங்கள் 20 வயதில் ரூ. 1 லட்சத்தை முதலீடு செய்தால், உங்களுக்கு 60 வயதாகும்போது, உங்கள் முதலீடு சுமார் 100 மடங்கு அதிகரிக்கிறது. அதாவது ரூ. 1 கோடியாகிறது. இது 40 ஆண்டுகளில் கூட்டு வட்டி வருமானத்தின் மூலம் உங்கள் பணம் ஒவ்வொரு ஆண்டும் வேகமாக வளர்ந்து கொண்டே வந்ததே இதற்கு காரணம்.
30 வயதில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் கார்பஸ்
இப்போது நீங்கள் இந்த முதலீட்டை 10 ஆண்டுகள் தாமதமாக, அதாவது 30 வயதில் செய்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எனவே நீங்கள் 60 வயதை அடையும் போது, இந்தப் பணம் 30 மடங்கு மட்டுமே இருக்கும். அதாவது உங்கள் ரூ. 1 லட்சம் முதலீடு ரூ. 30 லட்சமாக மாறும். 10 ஆண்டுகள் தாமதமாக முதலீடு செய்யத் தொடங்குவதன் மூலம், ரூ. 70 லட்சம் வருமானம் ஈட்டும் வாய்ப்பை இழந்துவிட்டீர்கள்.
40 வயதில் முதலீடு செய்வதில் கிடைக்கும் மிகக் குறைந்த லாபம்
இப்போது நீங்கள் 40 வயதில் முதலீடு செய்யத் தொடங்கும்போது என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். நீங்கள் 40 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், உங்கள் முதலீடு வளர 20 ஆண்டுகள் மட்டுமே கால அவகாசம் கிடைக்கும். பின்னர் உங்கள் ரூ. 1 லட்சம் முதலீடு 10 மடங்கு மட்டுமே வளரும், அதாவது ரூ. 10 லட்சமாக மாறும். இந்த வருமானம் மோசமானதல்ல என்றாலும், 20 வயதில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் பெறும் வருமானத்தை விட இது மிகக் குறைவு.
முதலீட்டு அளவு அல்ல, முதலீட்டின் காலம் முக்கியம்
மேலே உள்ள உதாரணம், எவ்வளவு விரைவில் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள் என்பது முக்கியம் என்பதைக் காட்டுகிறது. முதலீடு வளர நீண்ட கால அவகாசம் கிடைக்கும்போது மட்டுமே கூட்டு வட்டி வருமானம் என்னும் மந்திரம் செயல்படும். ஆரம்ப ஆண்டுகளில், உங்கள் பணம் மெதுவாக வளரும். ஆனால் பின்னர், குறிப்பாக இறுதியில், அது மிக வேகமாக வளரும். இதற்குக் காரணம் கூட்டு வட்டி வருமானம்.
நீண்ட கால முதலீடு பணத்தை பன்மடங்காக்கும்
நீங்கள் எவ்வளவு இளமையில் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு பெரிய நிதியை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒருவர் 20-22 ஆண்டுகளில் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்தாலும், ஓய்வு பெறும்போது அவரிடம் மிகப் பெரிய கார்பஸ் இருக்கும். முதலீட்டில் பொறுமை இருக்கும்போது மட்டுமே கூட்டுத்தொகையின் பலன் கிடைக்கும். நீங்கள் 20-22 வயதுடையவராக இருந்து, 1 லட்சம் ரூபாய் என்பது பெரிய தொகை அல்ல என்று நினைத்தால், இந்தப் பணம் ஒரு நாளில் 1 கோடி ரூபாயாக உயரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ