)
பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஓய்வூதியத்திற்கான ஒரு முதலீட்டுத் திட்டம் மட்டுமல்ல. இது ஒரு 'அக்ஷய பாத்திரம்'. அள்ள அள்ள குறையாத செல்வத்தை கொடுக்கும். PPF திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 முதலீடு செய்வது 60 வயதில் ரூ.2.26 கோடிக்கு எவ்வாறு உரிமையாளராக முடியும் என்பதை இன்று எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்வோம்.
PPF என்றால் என்ன, இந்த திட்டம் எப்போது தொடங்கியது?
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) 1968 ஆம் ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், சாதாரண மக்களுக்கு ஒரு சிறு சேமிப்புத் திட்டத்தை வழங்குவதாகும். இதன் மூலம் அவர்கள் சிறிய அளவிலான பணத்தைச் சேமித்து, குழந்தைகளின் கல்வி, திருமணம் அல்லது ஓய்வூதியம் போன்ற அவர்களின் நீண்டகால இலக்குகளிய சமாளிக்க பெரிய நிதியை உருவாக்க முடியும். இதன் மிகப்பெரிய அம்சம் அதன் பாதுகாப்பு மற்றும் வரிச் சலுகைகள் ஆகும். ஏனெனில் இது அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
PPF ஏன் 'முதலீட்டின் பிரம்மாஸ்திரம்' என்று கருதப்படுகிறது?
PPF பிரபலமடைவதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணம் அதன் EEE (விலக்கு-விலக்கு-விலக்கு) நிலை. நிதி உலகில், இது 'பிரம்மாஸ்திரம்' என்று கருதப்படுகிறது.
முதல் E (விலக்கு): ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1.5 லட்சம் வரையிலான முதலீட்டில் வருமான வரியின் 80C பிரிவின் கீழ் முழு விலக்கு பெறுவீர்கள்.
இரண்டாவது E (விலக்கு): உங்கள் முதலீட்டில் ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் பெறும் வட்டி (தற்போது 7.1%) முற்றிலும் வரி இல்லாதது.
மூன்றாவது E (விலக்கு): 15 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது முதிர்ச்சியின் போது திரும்ப பெறும் தொகைக்கு வரி இல்லை.
கோடீஸ்வரராக மாறுவதற்கான முழுமையான கணக்கீடு:
உங்கள் சிறிய முதலீட்டை கோடிகளாக மாற்றும் கணிதத்தை இப்போது புரிந்துகொள்வோம். உங்களுக்கு 25 வயது ஆன நிலையில், நீங்கள் PPF திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 (அதாவது ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம்) முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
(தற்போதைய கூட்டு வட்டி விகிதம் 7.1% அடிப்படையில்)
முதல் 15 ஆண்டுகளுக்கு, மாதம் ரூ.12,500 அல்லது ஆண்டுதோறும் 1.5 லட்சம் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ₹22.5 லட்சம் முதலீடு செய்வீர்கள். தற்போதைய 7.1% வட்டி விகிதத்தில், உங்களுக்கு ரூ.18,18,209 வட்டி கிடைக்கும். மேலும் முதிர்வுத் தொகை ரூ.40,68,209 ஆக இருக்கும்.
PPF கணக்கை முதிர்ச்சியடைவதற்கு முன்பு அதை நீட்டிக்க வேண்டும். இதனை 5 - 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீட்டிக்கலாம். இந்த வழியில், நீங்கள் கணக்கை 4 முறை நீட்டித்து, ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீட்டை 35 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்.
35 ஆண்டுகளுக்கு பிறகு 60வது வயதில், உங்கள் கணக்கில் ரூ.2.26 கோடி இருக்கும். அதில் நீங்கள் முதலீடு செய்த பணம் ரூ.52.50 லட்சம் மட்டுமே. அதே நேரத்தில் இதில் ரூ.1.74 கோடி என்பது வெறும் வட்டி மட்டுமே. இதுதான் கூட்டு வட்டி வருமானத்தின் உண்மையான சக்தி.
பணத்தை பன்மடங்காக பெருக்கும் சக்திவாய்ந்த, பாதுகாப்பான மற்றும் வரி இல்லாத PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் தவறாமல் ரூ.12,500 மட்டும் முதலீடு செய்வதன் மூலம் 35 ஆண்டுகளில் ரூ.2.26 கோடிக்கு மேல் வரி இல்லாத நிதியை எந்த ஆபத்தும் இல்லாமல் உருவாக்க முடியும். ஓய்வு கால பாதுபாப்பான வாழ்க்கைக்கு ஒரு பெரிய கார்பஸை உருவாக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ