PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்ய, 15+5+5 என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தினால் கோடியில் பணம் உங்கள் கையில் இருக்கும்.

பங்கு சந்தையில் காணப்படும் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள், அதிகம் இலாபம் தரும் முதலீட்டினை தேர்ந்தெடுக்க விரும்பினால், அதற்கான சிறந்த சாய்ஸாக PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதி இருக்கும். கோடியில் நிதியை சேர்ப்பதன் மூலம் வசதியான வாழ்க்கையை விரும்பினால், PPF கணக்கில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் படிப்படியாக மில்லியனர் ஆகலாம்.
கோடீஸ்வரராக்கும் PPF முதலீடு
PPF திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் மில்லியனர் ஆகலாம். PPF திட்டத்தில் முதலீடு செய்ய, 15+5+5 என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தினால் கோடியில் பணம் உங்கள் கையில் இருக்கும். அதாவது, முதலில் 15 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்து, பிறகு 5 வருடங்கள் நீட்டித்து, பிறகு மீண்டும் 5 வருடங்களுக்கு நீட்டிக்க வேண்டும். இப்படி ஒரு உத்தியை பின்பற்றினால், உங்கள் முதலீடு ரூ.1 கோடியைத் தாண்டும். முதலீட்டிற்கான PPF சூத்திரத்தை இந்த பதிவில் புரிந்துகொள்வோம்.
PPF 15+5+5 ஃபார்முலா
முதலீட்டில் ரிஸ்க் ஏதும் இல்லாமல் மில்லியனர் ஆக விரும்பினால், பொது வருங்கால வைப்பு நிதி சிறந்த தேர்வாக இருக்கும். PPF பாதுகாப்பு உத்தரவாதத்துடன் வரி சேமிப்பு மற்றும் நல்ல வருமானத்தை வழங்குகிறது. இதில், 15+5+5 ஃபார்முலாவை கடைபிடிப்பதன் வரி சேமிப்பு வழங்கப்படும். இருப்பினும், பிபிஎஃப் திட்டத்தில் ரூ.1 கோடி நிதியை உருவாக்க, 5 ஆண்டுகள் நீட்டிப்பு என்பது மிக முக்கியமானது.
கூட்டு வட்டி வருமானம்
PPF கணக்கின் முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் மட்டுமே. இருப்பினும், நீங்கள் அதை 5 - 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், நீங்கள் நிதியை பன் மடங்கு பெருக்கலாம். ஆம், நீங்கள் தொடர்ந்து 15+5+5 அதாவது 25 வருடங்கள் முதலீடு செய்தால், கூட்டு வட்டியின் பலன் காரணமாக, உங்கள் முதலீடு பன்மடங்கு அதிகரிக்கலாம். இதன் மூலம் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிதி உருவாக்கப்படும்.
PPF மூலம் கோடீஸ்வரர் ஆகலாம்
உங்களுக்கு இப்போது 25 வயதாகியுள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பிபிஎஃப் திட்டத்தில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சமாக இருக்கும். 7.1% ஆண்டு வட்டி விகிதத்தில், இந்தத் தொகை ரூ.40 லட்சத்தை எட்டும். நீங்கள் அதை 5 - 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், உங்கள் தொகையை கூட்டும் மந்திரம் மூலம் ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல் ஆகலாம்.
முழு கணக்கீடு
15+5+5 ஃபார்முலாவின் கணக்கீட்டைப் புரிந்து கொள்ளலாம். தற்போதைய வட்டி விகிதமான 7.1% ஆண்டு கூட்டு வட்டி விகிதத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் முதலீடு 1.5 லட்சமாக இருக்கும். இந்த முதலீட்டை 15 ஆண்டுகள் தொடர்ந்தால், மொத்த முதலீடு ரூ.22.50 லட்சமாக இருக்கும். இந்த முதலீட்டில் நீங்கள் சுமார் ரூ.40.68 லட்சம் கார்பஸ் பெறுவீர்கள். இந்தக் கணக்கை 5 + 5 ஆண்டுகள் நீட்டித்தால், 25 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.37.50 லட்சமாக இருக்கும். இதில் வட்டி வருமானத்தையும் சேர்த்தால், சுமார் ரூ.1.03 கோடி நிதியைப் பெறுவீர்கள். வட்டியில் இருந்து மட்டுமே ரூ.65.58 லட்சம் கிடைக்கும். அதாவது, 15+5+5 ஃபார்முலா மூலம் கோடீஸ்வரர் ஆகலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ