)
RBI new ATM guidelines : குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் கிடைக்கும் தன்மையை மேம்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கிகளுக்கு புதிய உத்தரவை நிர்ணயித்துள்ளது. செப்டம்பர் 30, 2025 ஆம் ஆண்டுக்குள், ஒரு வங்கியின் ஏடிஎம்களில் குறைந்தது 75 விழுக்காடு 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்கும் வகையில் கட்டமைக்கப்பட வேண்டும் என புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், அனைவருக்கும் தினசரி பண அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது சில்லறை பிரச்சனைகள் அதிகமாக எழுந்த நிலையில் ரிசர்வ் வங்கி பிறப்பித்திருக்கும் புதிய உத்தரவால், ஏடிஎம்களில் இருந்து ரூ.100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அதிகமாக பெறலாம்.
குறைந்த மதிப்பிலான பொருட்களை வாங்குவது, டாக்ஸியில் பயணம் செய்வது என பெரும்பாலான சிறிய பரிவர்த்தனைகளுக்கு 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் பணம் தேவைப்படுகின்றன. சில்லரை கொடுப்பதற்கும் இந்த ரூபாய் தாள்கள் தேவைப்படும் நிலையில், ஏடிஎம்மில் இருந்து இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைப் பெற முடிவதில்லை. பெரும்பாலும் ரூ.500 அல்லது ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே வருவதால் மக்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். இது பலருக்கு ஒரு பொதுவான தொந்தரவாக உள்ளது, இப்போது ஆர்பிஐ ரூ.100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்கள் மூலம் எளிதாகக் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளின் தொடர்ச்சியான பற்றாக்குறையை ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளது. இந்த பற்றாக்குறை, குறிப்பாக அதிக மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்படும் அன்றாட கொள்முதல்களுக்கு சிரமங்களை உருவாக்கியுள்ளது. ரூ.50 மட்டுமே தேவை, ஆனால் ரூ.500 எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழலில் நீங்கள் இருந்தால் கற்பனை செய்து பாருங்கள். குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் குறைவாக கிடைப்பது குறிப்பாக ஏடிஎம்குறைவாக உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இந்தப் பிரச்சினை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் ரூ.100 மற்றும் ரூ.200 போன்ற சிறிய மதிப்புள்ள நோட்டுகளின் கிடைக்கும் தன்மையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி இந்தப் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், குறிப்பாக கிராமப்புற மற்றும் சப்-அர்பன் பகுதிகளில், இத்தகைய நோட்டுகள் சீராக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வதே ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுக்கு பின்னணியில் இருக்கும் நோக்கமாகும்.
அனைத்து வங்கிகளும் இந்த உத்தரவைப் பின்பற்றுவதற்கான தெளிவான காலக்கெடுவை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. செப்டம்பர் 30, 2025க்குள், ஒவ்வொரு வங்கியின் ஏடிஎம்களிலும் குறைந்தது 75% ரூபாய் 100 மற்றும் ரூபாய் 200 ரூபாய் நோட்டுகளை வழங்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும், இந்தத் தேவை மார்ச் 31, 2026க்குள் 90% ஆக உயரும். இதை அடைய, வங்கிகள் தங்கள் ஏடிஎம்களை மேம்படுத்த வேண்டும் மற்றும் இந்த சிறிய ரூபாய் நோட்டுகளுக்கு இடமளிக்கும் வகையில் உள் ரூபாய் நோட்டு கேசட்டுகளை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ