)
Reserve Bank Of India Latest News: இப்போதைய காலகட்டத்தில் நம்மில் பலரும் வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவது இயல்பானதாகிவிட்டது. மாதம் பிறந்து சம்பளம் வந்ததும் EMI செலுத்தாத நபர்களை காண்பதே அபூர்வமாகிவிட்டது. இருப்பினும், அத்தியாவசியத் தேவைகள், வீட்டு உபயோக பொருள்கள் போன்றவற்றுக்கு கடன் பெறுவது ஓரளவு ஏற்றுக்கொள்ளத்தக்கது எனலாம்.
அனைத்திற்குமே ஒரு வரையறை இருக்கிறது. அதை தாண்டும்போதுதான் சிக்கல் எழுகிறது. அந்த வகையில், அத்தியாவசிய தேவையை தாண்டி ஆரம்பர செலவுகளுக்கு கடன் பெறும் பழக்கம் அதிகமானால் அது உங்களின் நிதி நிலைமையை மோசமாக்கலாம். இதனால் உங்களால் EMI கூட சரியாக செலுத்த முடியாமல் போகலாம்.
அப்படியிருக்க, கடன் வாங்கிவிட்டு EMI செலுத்தாமல் இருந்தால் உங்களின் மொபைலை லாக் செய்வதற்கான பேச்சுகள் தற்போது ஒலிக்கத் தொடங்கி உள்ளன. நேற்று முன்தினம் (அக். 1) அன்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களை சந்தித்தபோது, இதுகுறஇத்து விரிவாக பேசியிருந்தார். அதாவது, கடன் வாங்கிவிட்டு முறையாக அதை திருப்பிச் செலுத்தாதவர்கள், அவர்கள் கொடுத்த விவரங்களின் கீழ் வரும் மொபைலை லாக் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பரிசீலனை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்தார்.
ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா நிதிக் கொள்கை குழு கூட்டத்திற்கு பின் பேசியதாவது, வாகனக் கடன்கள் பெற்றவர்கள் கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் அவர்களின் வாகனத்தை ஜப்தி செய்வதை போன்று, கடன் வாங்கிவிட்டு பணம் செலுத்தாததற்காக மொபைல்களை தன்னிச்சையாக பிளாக் செய்யவோ அல்லது லாக் செய்யவோ வங்கிகளை அனுமதிக்க முடியாது என்றார்.
இருப்பினும், கடன் வாங்குவோர் மற்றும் கடன் வழங்குவோர் ஆகிய இரு தரப்பு முன்வைக்கும் வாதங்களை தொடர்ந்து இந்த விஷயம் பரிசீலனையில் உள்ளது. இந்த வாதங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. கடன் பெறும் நுகர்வோர் உரிமைகள் மற்றும் அவர்களின் தரவு தனியுரிமையை (Data Privacy) பாதுகாப்பதே எங்கள் முக்கிய நோக்கம். நுகர்வோர் உரிமைகள் எங்களுக்கு மிக முக்கியமானவை. அதே நேரத்தில், கடன் வழங்குபவர்களின் நலனை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதையும் உற்று நோக்குவோம். இந்த விஷயம் தற்போது ஆராயப்பட்டு வருகிறது" என்றார்.
குறைந்த அளவிலான தொகையை கடனாக வாங்கி, அதை திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் வேளையில், அவர்களின் மொபைலை லாக் செய்வதற்கு முன்வர வேண்டும் என வங்கிகள் தங்களின் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும், இந்தியாவில் கடன் பெறுவோரில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் குறைந்த அளவிலான தொகையில் மொபைல் போன்ற மின்னணு பொருள்களையே வாங்குகிறார்கள் என கடந்த 2024இல் ஹோம் கிரெடிட் ஃபைனான்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் அவர்களின் மொபைலை லாக் செய்வது ஒன்றும் இப்போது எழுந்த பேச்சில்லை. ஏற்கெனவே, பல்வேறு ஆன்லைன் கடன் கொடுக்கும் செயலிகள் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றன. அதாவது தங்களிடம் கடன் பெற்றவர்கள் அதை திருப்பிச் செலுத்த தவறினால், அவர்களின் செயலியின் வாயிலாக மொபைலை லாக் செய்து வந்தனர். ஆனால் இந்த நடைமுறையை நிறுத்துமாறு கடன் கொடுப்பவர்களிடம் ஆர்பிஐ தெரிவித்தது. இதற்கு ஆர்பிஐ தற்போது வரை அனுமதி கொடுக்கவில்லை.
ஆர்பிஐ துணை கவர்னர் ராஜேஷ்வர் ராவ் இதுகுறித்து கூறுகையில், "ஆர்பிஐ கவர்னர் கூறியதை போல், இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது. நுகர்வோரின் உரிமைகள் மற்றும் தரவு தனியுரிமையின் தேவைகள் மட்டுமின்றி கடன் கொடுப்பவரின் தேவைகளை சமநிலைப்படுத்துவதில் இரு தரப்பிலும் நன்மை தீமைகள் இருக்கின்றன" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ