)
RBI New EMI Rule: இந்திய ரிசர்வ் வங்கி (RBI), தவணை முறையில் (EMI) மொபைல் போன் வாங்குபவர்களுக்கு ஒரு முக்கிய விதியை அமல்படுத்தத் தயாராகி வருகிறது. இனி, தவணைத் தொகையைச் செலுத்தத் தவறினால், வங்கிகள் தொலைவிலிருந்து வாடிக்கையாளர்களின் மொபைல் போனை தானாகவே லாக் செய்ய முடியும். இதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி விரைவில் வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம் என்ன?
இந்தியாவில், மொபைல் போன் போன்ற நுகர்வோர் மின்னணுப் பொருட்கள் (Consumer Electronics) பெரும்பாலும் சிறு தனிநபர் கடன்கள் மூலம் வாங்கப்படுகின்றன. ஹோம்கிரெடிட் ஃபைனான்ஸ் (Home Credit Finance) என்ற நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு ஆய்வுப்படி, மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான மின்னணுப் பொருட்கள் தவணை முறையில் வாங்கப்படுகின்றன. அப்படி வாங்கப்படும் மொபைல் போன்களுக்கான இஎம்ஐ முறையாக செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு புதிய விதிமுறை தொடர்பாக ஆர்பிஐ-க்கு பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ரிசர்வ் வங்கியும் இதற்கு ஒப்புதல் கொடுக்கும் முடிவில் இருக்கிறது. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமே, வங்கிகளின் வாராக் கடன்களை (NPA) குறைப்பதாகும். கடன் தொகையைத் திரும்பச் செலுத்தாததால் வங்கிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைப்பதற்கான ஒரு வழியாக இது பார்க்கப்படுகிறது.
புதிய விதிமுறை எப்படிச் செயல்படும்?
வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, ரிசர்வ் வங்கி தனது நிதி நிறுவனங்களுக்கான நடைமுறை விதிகளை (Fair Practices Code) வரும் மாதங்களில் அப்டேட் செய்ய உள்ளது. இந்த அப்டேட்டில், போனை லாக் செய்யும் முறையைப் பற்றிய புதிய வழிகாட்டுதல்கள் சேர்க்கப்படும்.
முந்தைய விதிமுறை: கடந்த ஆண்டு, தவணை செலுத்தாத வாடிக்கையாளர்களின் போன்களை லாக் செய்யும் நடைமுறையை உடனடியாக நிறுத்தும்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இதற்கு முன், தவணை முறையில் போன் வாங்கும்போதே, அதில் ஒரு சிறப்பு செயலி (App) நிறுவப்பட்டது. இந்தக் செயலி மூலம், வாடிக்கையாளர் சரியான நேரத்தில் தவணையைச் செலுத்தத் தவறினால், வங்கி அல்லது கடன் வழங்கும் நிறுவனம் தொலைவிலிருந்து போனை லாக் செய்யும் உரிமையைப் பெற்றது.
புதிய விதிமுறை: தற்போது கொண்டுவரப்பட உள்ள புதிய விதியின்படி, போனை லாக் செய்வதற்கு முன் கடன் வாங்குபவரின் முன் அனுமதி (Prior Consent) பெறுவது கட்டாயமாக்கப்படும். மேலும், லாக் செய்யப்பட்ட போனில் இருந்து வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளை (Personal Data) அணுகுவதற்கு வங்கிகள் மற்றும் கடன் வழங்குபவர்களுக்கு கடுமையான தடை விதிக்கப்படும்.
இந்த நடவடிக்கை மூலம் வங்கிகள் சிறிய கடன்களைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்யவும், அதே நேரத்தில் வாடிக்கையாளர்களின் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும் ரிசர்வ் வங்கி முயன்று வருகிறது.
இந்தியாவில் ட்ராய் (TRAI) அறிக்கையின்படி, 1.16 பில்லியனுக்கும் அதிகமான மொபைல் இணைப்புகள் உள்ளன. எனவே, ரிசர்வ் வங்கியின் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால், அது வங்கிகளுக்குப் பாதுகாப்பை வழங்குவதோடு, வாடிக்கையாளர்கள் தங்கள் கடனை சரியான நேரத்தில் திரும்பச் செலுத்தவும் அழுத்தம் கொடுக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ