)
மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டின் 15×15×15 விதி: நீண்ட காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் அதிக வருமானத்துடன் கூடிய பெரிய கார்பஸை உருவாக்கலாம். திட்டமிட்ட முறையில் முதலீடு செய்வதன் மூலம், கோடீஸ்வரராக உருவெடுப்பது கடினமான காரியமல்ல. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம், அதன் மூலம் ரூ. 1 கோடி திரட்டுவதே உங்கள் இலக்கு என்றால், மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டு சூத்திரமான டிரிபிள் 15 அதாவது 15x15x15 விதி அல்லது ஃபார்முலா உங்களுக்கு அதில் உதவும்.
மியூச்சுவல் ஃபண்ட் 15×15×15 ஃபார்முலா என்றால் என்ன?
'15' என்பது மியூச்சுவல் ஃபண்டுகளின் டிரிபிள் 15 ஃபார்முலாவில், முதல் 15 எண்ணின் பொருள், உங்கள் முதலீட்டு இலக்கு 15 ஆண்டுகள், அதாவது நீண்ட கால SIP முதலீடாக இருக்க வேண்டும். இரண்டாவது 15 எண்ணின் பொருள், ஒவ்வொரு மாதமும் உங்கள் வருமானத்தில் இருந்து ரூ. 15,000 சேமித்து SIP முதலீடு செய்ய வேண்டும். மூன்றாவது 15 எண்ணின் பொருள்,நீங்கள் SIP (முதலீடு) செய்த திட்டம் ஆண்டுக்கு 15 சதவீத (SIP வருமானம்) மதிப்பிடப்பட்ட வருமானத்தைக் பெற வேண்டும். அதாவது 15 சதவீத வருடாந்திர வருமானத்தை அளிக்கும் பங்குத் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.
மாதாந்திர SIP தொகை: ரூ. 15,000
முதலீட்டு காலம்: 15 ஆண்டுகள்
மதிப்பிடப்பட்ட ஆண்டு வருமானம்: 15 சதவீதம்
15 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ. 27,00,000 (ரூ. 27 லட்சம்)
15 ஆண்டுகளுக்குப் பிறகு SIP மதிப்பு: ரூ. 1,01,52,946 (ரூ.1 கோடி)
மொத்த மூலதன வருமானம்: ரூ. 73 லட்சம்
மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால முதலீடு செய்வதன் நன்மைகள்
நீண்ட காலத்தில் முதலீடு செய்வதன் முதல் நன்மை என்னவென்றால், குறுகிய கால அபாயங்கள் பாதிக்கப்படாமல், சிறந்த வருமானம் பெறப்படுகிறது. பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இரட்டை இலக்க வருமானத்தை தருகின்றன. சிறப்பாகச் செயல்படும் திட்டங்கள் 15 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வருடாந்திர வருமானத்தை வழங்குகின்றன.
இரண்டாவது நன்மை என்னவென்றால், நீண்ட கால முதலீடு மூலம் கூட்டு வட்டி வருமானத்தை அதிகபட்ச பலனை பெறலாம். இதன் மூலம் ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும்.
மூன்றாவது நன்மை என்னவென்றால், முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகளை அடைய நிலையான மற்றும் சிறந்த முதலீட்டு உத்தியை உருவாக்க இது உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ