)
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது வருமானத்தை அள்ளித் தருகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. இதில் ரூ.500 என்ற அளவில் கூட முதலீட்டைத் தொடங்கலாம் என்பதால் சாமானியர்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும். அதோடு, கூட்டு வட்டி வருமானத்தின் பலன் கிடைப்பதால், நூறுகள் இலட்சங்கள் ஆக்குவதும், ஆயிரங்களை கோடிகளாக்குவதும் மிக எளிது.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
எஸ்ஐபி என்னும் பரஸ்பர நிதிய முதலீடு பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டம் என்றாலும், இதில் ரிஸ்க் குறைவு. இதில் நீண்ட கால முதலீடுகளுக்கு, குறைந்த பட்சம் 12% வருமானம் கிடைக்கிறது என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். தரவுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. எனினும், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இதில் செய்யும் சில தவறுகள், பெரும் இழப்பை ஏற்படுத்தலாம்.
முதலீடு செய்யும் பரஸ்பர நிதியின் நிலையை புரிந்து கொள்ளாமல் இருப்பது
மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒவ்வொரு நிதியும் வெவ்வேறு வகையான அபாயங்களைக் கொண்டிருக்கும். இதனை தரவுகள் மூலம் ஆராய்ந்து சரியான நிதியை தேர்ந்தெடுக்க வேண்டும். சில நிதிகள் அதிக வருமானத்தைத் தருகின்றன. ஆனால் அவற்றில் இழப்பு அபாயமும் அதிகமாக இருக்கலாம். ஒரு முதலீட்டு ஆலோசாரை கலந்தாலோசித்து, உங்களது பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப நிதியைத் தேர்வு செய்யவும்.
ஒரே வகை மியூச்சுவல் ஃப்ண்டில் அனைத்தையும் முதலீடு செய்தல்
நீங்கள் உங்கள் பணத்தை ஒரு வகையான நிதியில் அல்லது பங்குச் சந்தையில் மட்டும் முதலீடு செய்தால், ஆபத்து அதிகரிக்க்கும். எனவே, உங்கள் பணத்தை பங்குகள், பத்திரங்கள், கடன் நிதிகள் போன்ற பல்வேறு இடங்களில் முதலீடு செய்வது முக்கியம். இது இழப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
கடந்த கால வருமானத்தை ஆராய்தல்
ஒரு நிதி சமீபத்தில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தால், அது எதிர்காலத்திலும் சிறப்பாகச் செயல்படும் என்று அர்த்தமல்ல. எனவே கடந்த சில மாதங்களின் வருமானத்தைப் பார்த்து மட்டும் ஒரு நிதியைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். அந்த ஃபண்ட் நீண்ட காலத்தில், 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகளில் எந்த அளவிற்கு வருமானத்தை கொடுத்துள்ளது என்பதைப் பார்ப்பது நல்லது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறுகிய காலத்திற்கு ஏற்றது அல்ல
பலர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவுடன், சில மாதங்களில் பெரிய வருமானத்தைப் பெறலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது சாத்தியம் அல்ல. சந்தை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். எஸ்ஐபி முதலீடுகளில் அதிகபட்ச மூலதன ஆதாயத்தை பெற விரும்பினால், அதனை தடையில்லாமல் நீண்ட காலம் தொடர்வது மிக அவசியம். இதன் மூலம் கூட்டு வட்டி வருமானத்தின் அதிகபட்ச பலனை பெற முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ