நிதி ரீதியாக வலுவாக இருக்க, முறையான சேமிப்பும், அதனை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதும் முக்கியம். மாதம் தோறும் ₹5000 முதலீடு செய்வதன் மூலம் ரூ.6 கோடிக்கு உரிமையாளராக மாற முடியுமா?... நிச்சயம் முடியும். SIP முதலீட்டின் 5x12x40 சூத்திரம் அத்தகைய அதிசயங்களைச் செய்ய முடியும். 5x12x40 ஃபார்முலாவை பின்பற்றி ஒவ்வொரு மாதமும் ₹5000 ரூபாயை தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், கோடிக்கணக்க்கில் பணத்தை சேர்க்கலாம்.
பரஸ்பர நிதிய முதலீடு
SIP என்னும் பரஸ்பர நிதிய திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல் வாழலாம். அதோடு உங்கள் குழந்தையையும் கோடீஸ்வரனாக்கலாம். ம்யூச்சுவல் ஃபண்டுகளில் ஒவ்வொரு மாதமும் உங்களால் முடிந்த ஒரு நிலையான தொகையை தொடர்ந்து முதலீடு செய்யலாம், இதன் காரணமாக உங்கள் பணம் படிப்படியாக வளரும். உங்களது மற்றும் உங்கள் குழந்தையின் எதிர்காலம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்.
சிறிய முதலீடுகளில் பெரிய நிதி
SIP மூலம், சிறிய முதலீடுகள் மூலம் பெரிய நிதிகளை உருவாக்க முடியும். இதில் கிடைக்கும் கூட்டு வட்டி வருமானம் இதனை சாத்தியமாக்குகிறது.இதனால் எந்த அளவிற்கு நீண்ட கால முதலீட்டை தொடருகிறீர்களோ, அந்த அளவிற்கு கூட்டு வட்டியின் பலனை பெறலாம். இதில் ரூ.5000 என்ற அளவில் தொடர்ந்து 40 ஆண்டுகள் முதலீடு செய்வதன் மூலம் எப்படி அதிசயங்கள் நிகழும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
ஆயிரங்களை கோடிகளாக்கும் 5x12x40 சூத்திரம்
உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை நிதி ரீதியாக பாதுகாப்பானதாக மாற்ற விரும்பினால், SIP முதலீட்டின் 5x12x40 சூத்திரம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஃபார்முலாவின்படி, உங்கள் குழந்தைக்கு 5 வயதாகும்போது, அவரது பெயரில் ஒவ்வொரு மாதமும் ரூ. 5000 எஸ்ஐபியைத் தொடங்குங்கள். இந்த SIP முதலீடு 40 ஆண்டுகள் தொடர வேண்டும். SIP முதலீட்டில் குறைந்தது 12% வரை வருடாந்திர வருமானத்தைப் பெறுவீர்கள். கணக்கீடுகளின் அடிப்படையில், நீங்கள் சுமார் 6 கோடி ரூபாய் நிதியை உருவாக்கலாம்.
40 ஆண்டுகளுக்கு தொடர் SIP முதலீடு
உங்கள் குழந்தை கோடீஸ்வரராக வேண்டும் என நீங்கள் விரும்பினால், குழந்தையின் 5 வயது முதல் SIP இல் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் முதலீடு செய்தால், அதை 18 வயது வரை தொடர வேண்டும். குழந்தைக்கு 18 வயது ஆன பிறகு, இந்தக் கணக்கு குழந்தையின் பெயருக்கு மாற்றப்படும். பின்னர் 18 வயது முதல் 40 வயது வரை அவரே ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். சராசரியாக 12% என்ற்அ அளவில் ஆண்டு வருமானம் கிடைத்தால், 40 வயதில், சுமார் 6 கோடி ரூபாய் நிதியை உருவாக்க முடியும்.
40 வருடங்களில் கோடீஸ்வரர் ஆகலாம்
எஸ்ஐபி மூலம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்தால், சுமார் 12% ஆண்டு வருமானம் கிடைக்கும். உங்கள் குழந்தைக்கு தற்போது 5 வயதாகி, அவர் பெயரில் மாதந்தோறும் ரூ. 5000 எஸ்ஐபியில் முதலீடு செய்தால், அவருக்கு 40 வயதாகும் போது, உங்களின் 480 தவணைகளில் மொத்தம் ரூ.24 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். ஆனால் 12% கூட்டு வருவாயைக் கருத்தில் கொண்டால், இந்தத் தொகை சுமார் ரூ.6 கோடியாக அதிகரிக்கும்.
கோடிகளில் வருமானம்
SIP மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ 5000 முதலீடு செய்வது 40 ஆண்டுகள் நீடிக்கும் நிலையில். 40 ஆண்டுகளில் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.24 லட்சமாக இருக்கும். ஆண்டுக்கு 12% கூட்டு வருமானம் மூலம், சுமார் 5.70 கோடி ரூபாய் கிடைக்கும். இரண்டையும் சேர்த்தால், உங்கள் கையில் சுமார் ரூ.6 கோடி இருக்கும்.
மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









