)
இளம் வயதில் சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே முதலீடு செய்வது, ஓய்வு காலத்திற்கான நிதியை சேர்க்க உதவும் சிறந்த உத்தியாக இருக்கும். என்றாலும் சில பல காரணங்களால், சம்பாதிக்க ஆரம்பித்த உடன் முதலீடு செய்ய முடியாமல் போகலாம். சிலருக்கு, 40 வயதில்தான் முதலீடு செய்யும் சூழ்நிலை உண்டாகலாம். எனினும் கவலை வேண்டாம். சில விஷயங்களில் கவனம் செலுத்தினால், ஓய்வு காலத்திற்கான நிதியை கோடிகளில் சிறப்பாக சேமிக்க முடியும்.
ரிஸ்க் மேனேஜ்மென்டில் கவனம் செலுத்தவும்
40 வயதில் முதலீடு செய்யத் தொடங்கும் போது, அதிக ரிஸ்க் எடுப்பது சரியில்லை. எனவே, முதலீட்டு நிபுணர்களின் ஆலோசனையுடன், முதலீட்டு தேர்வுகளை கவனமாகவும் சிறப்பாகவும் செய்வது அவசியம். பரஸ்பர நிதியம் என்னும் எஸ்ஐபி முதலீடு சிறந்த தேர்வாக இருக்கும். எனினும் அதில், அனைத்தையும் போடாமல் அரசாங்க பத்திரங்கள், வங்கி எப்படி முதலீடுகள் என பிரித்து முதலீடு செய்வது சிறந்த ஒத்தியாக இருக்கும்.
அவசர காலத்திற்கான நிதியை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம்
குடும்பத்தில் ஏற்படும் அவசர கால செலவுகளான மருத்துவ செலவுகள், எதிர்பாராத செலவுகள் ஆகியவற்றை சமாளிக்க, ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கி வைப்பது எப்போதுமே நல்லது. இதனால் அவசர காலத்தில் உங்கள் முதலீட்டில் கை வைக்காமல், அவற்றை தடையில்லாமல் தொடர உதவும். SIP போன்ற பரஸ்பர நிதிய முதலீட்டில், நீண்ட கால தொடர் முதலீடு அவசியம். அப்போதுதான் கூட்டு வட்டி வருமானத்தின் அடிப்படையில் கிடைக்கும் மூலதன ஆதாயத்தின் பலனை அதிகபட்சமாக பெற இயலும்.
டாப் SIP என்னும் சிறந்த யுத்தியை கடைப்பிடித்தால் ஆயிரங்களை கோடிகளாக்கலாம்
ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை நிர்ணயித்து, பரஸ்பர நிதிய முதலீட்டை தொடங்கிய நிலையில், ஆண்டுதோறும் வருமானம் அதிகரிக்கும் போது, முதலீட்டு தொகையையும் அதிகரிப்பது, ஓய்வூதியத்திற்கான கார்ப்பசை சிறந்த முறையில் சேர்க்க உதவும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில், குறைந்தபட்சம் 12 சதவிகித வருமானம் கிடைப்பதாக பொருளாதார வல்லுநர்கள் உறுதி கூறுகின்றனர். இதுவரை உள்ள தரவுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வூதிய நிதிக்கான திட்டமிடல்
உங்களது 40 வயதில் முதலீடு செய்ய ஆரம்பிக்கும் போது, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுடன், NPS என்னும் தேசிய ஓய்வூதிய அமைப்பு, PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதி போன்றவற்றையும் தொடர்வது சிறந்த உத்தியாக இருக்கும். ஓய்வு காலத்திற்கான காப்ர்பஸ் மூலம், SWP அல்லது வங்க்கி எப்டி திட்டங்கள் மூலம் வழக்கமான ஓய்வூதியத்தை பெற திட்டமிடலாம்.
ஓய்வூதிய காலத்திற்கான நிதியை சிறப்பாக சேர்க்க
40 வயதில் முதலீட்டை தொடங்குவது சிறிது தாமதமாக கருதப்பட்டாலும், சரியான திட்டமிடலுடன், சிறந்த உத்தியை கடைப்பிடித்து முதலீட்டைத் தொடர்ந்தால் நிச்சயம் ஓய்வூதிய காலத்திற்கான நிதியை சிறப்பாக சேர்க்க முடியும். முதலீட்டில் பொறுமையும், விடாமுயற்சியுடன் கடைபிடிக்கும் தொடர் முதலீடும் அவசியம். சந்தை ஏற்று இறக்கங்களை கண்டு பதற்றப்படாமல் செய்யப்படும் தொடர் முதலீடுகள் கோடிகளாக்கும் வல்லமை படைத்தவை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ