)
Tamil Nadu senior citizen law : இந்தியா முழுவதும் மூத்தகுடிமக்கள் பல்வேறு இன்னங்களை எதிர்கொண்டு வரும் சூழலில், அவர்களின் நலனைப் பேணிப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு கடுமையான சட்டவிதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. பெற்றோரை கைவிடுபவர்கள் தங்கள் கடமையில் இருந்து தவறும்போது கடுமையான சட்டச்சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்தவகையில், மூத்தகுடிமக்களான பெற்றோரை கைவிடுபவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சட்ட நடைமுறைகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு அரசு கொடுக்கும் சட்ட பாதுகாப்பு குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007
இச்சட்டம் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலனுக்கான சட்டரீதியான பாதுகாப்பை வழங்குகிறது. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, 2009ஆம் ஆண்டில் மாநில அரசு விதிகளை வகுத்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி, குழந்தைகள் மற்றும் சட்டப்பூர்வ வாரிசுகள் தங்கள் பெற்றோரைக் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமையைக் கொண்டுள்ளனர்.
தனது சொந்த வருமானம் அல்லது தனக்குச் சொந்தமான சொத்திலிருந்து தன்னை பராமரிக்க முடியாத மூத்தகுடிமக்கள், பெற்றோர் உட்பட, இந்தச் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் சொத்து தொடர்பான பிரச்சனைகள் குறித்து விண்ணப்பித்து தீர்வு காணலாம்.
சட்டத்தின் சிறப்பம்சங்கள்
• இச்சட்டம் பெற்றோர், வளர்ப்பு தாய், வளர்ப்பு தந்தை ஆகியோரை பெற்றோராக வரையறுக்கிறது.
* தங்கள் குழந்தைகள்/சட்டப்பூர்வ வாரிசுகளால் பராமரிக்கப்படாததால் பாதிப்படைந்த எந்தவொரு மூத்த குடிமக்களும், மாதத்திற்கு அதிகபட்சம் ரூ.10,000/- வரை பராமரிப்பு தொகையைப் பெறுவதற்காக, வருவாய் கோட்ட அளவில் இந்தச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பராமரிப்பு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யலாம். இந்தச் சட்டத்தின் கீழ் பராமரிப்பு தொகை வேண்டி தாக்கல் செய்யப்பட்ட மனு 90 நாட்களுக்குள் தீர்வு செய்யப்பட வேண்டும்.
* மூத்த குடிமக்களின் கவனிப்பு மற்றும் பாதுகாப்புக்கு பொறுப்பான நபர் அவரை கைவிட்டால், அத்தகைய நபருக்கு மூன்று மாதங்கள் - சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000/- வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
* இச்சட்டம் 31.12.2009 நடைமுறைக்கு வந்தபிறகு எந்தவொரு மூத்த குடிமக்களும் தனது குழந்தைகள் அல்லது வாரிசுகள் தன்னை பராமரிப்பார்கள் என்ற நிபந்தனைக்குட்பட்டு தனது சொத்துக்களை பரிசாக மாற்றிய பின்னர். அவ்வாரிசுகள் அவர்களை பராமரிக்க தவறிவிட்டாரெனில், பெற்றோர் (அ) மூத்த குடிமக்கள் சொத்து பரிமாற்றத்தை ரத்து செய்ய மனு அளிக்கலாம்.
சட்டத்தின் கீழ் குறைதீர்க்கும் வழிமுறை
பாராமரிப்புத் தீர்ப்பாயங்கள்
இச்சட்டத்தின் பிரிவு 5ன்கீழ் பெறப்பட்ட பராமரிப்பு விண்ணப்பங்களின்மீது தீர்ப்பளிப்பதற்கும், தீர்மானிப்பதற்கும், உத்தரவுகளை வழங்குவதற்கும் சட்டப் பிரிவு 7ன் கீழ் வருவாய் கோட்ட அலுவலர்கள் பராமரிப்பு தீர்ப்பாயமாக அரசால் நியமிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில், இதுபோன்ற 94 தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தீர்ப்பாயங்களுக்கு உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சமரசம் மற்றும் பராமரிப்பு அலுவலர்
இந்தச் சட்டத்தின் பிரிவு 18(1)ன் படி, மாவட்ட சமூக நல அலுவலர். சமரசம் மற்றும் பராமரிப்பு அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மூத்த குடிமகனும் எதிர் தரப்பினரும் சமரசம் செய்ய ஒப்புக்கொண்டால், தீர்ப்பாயம் வழக்கை மாவட்ட சமூக நல அலுவலர் அவர்களுக்கு பரிந்துரைக்கும், அல்லது 30 நாட்களுக்குள் இரு தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை உருவாக்க தொடர்புடைய ஆவணங்களை அனுப்புவதன் மூலம் இரு தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபரை நியமிக்கும். இந்தச் சட்டத்தின் பிரிவு 18(2)ன்கீழ், பாதிக்கப்பட்ட பெற்றோர் விரும்பினால், நடுவர் மன்றம் அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகளின் போது, அவர் சார்பாக பராமரிப்பு அதிகாரியான மாவட்ட சமூக நல அலுவலர் முறையீடு செய்யலாம்.
மேல்முறையீடு தீர்ப்பாயம்
பராமரிப்பு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மாவட்ட ஆட்சியரை மேல்முறையீட்டு தீர்ப்பாயமாக மாநில அரசு நியமித்துள்ளது. நடுவர் மன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீட்டாளர் 60 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
மாநில மற்றும் மாவட்ட அளவிலான மூத்த குடிமக்கள் நலக் குழு
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007-8 திறம்பட செயல்படுத்துவதற்காக, மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையில் மூத்த குடிமக்களுக்கான உயர்மட்ட ஆலோசனைக் குழுவையும், மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டக் குழுவையும் அரசு அமைத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ