UPS vs NPS: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்ற சிறந்த பென்ஷன் திட்டம் எதுவாக இருக்கும்?

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, மத்திய அரசு ஊழியர்கள் NPS அல்லது UPS ஆகிய இரண்டில் இருந்து ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஓய்வூதியத் திட்டமிடலுக்கு எந்த விருப்பம் சிறந்தது என்பதைப் புரிந்து கொள்ள, முதலில் இரண்டையும் ஒப்பிட்டு அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 28, 2025, 04:08 PM IST
  • ஊழியர்களிடையே ஓய்வூதிய சேமிப்பை ஊக்குவிப்பதற்காக NPS அறிமுகப்படுத்தப்பட்டது.
  • NPS திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள்.
  • யுபிஎஸ் மற்றும் என்பிஎஸ் இடையே உள்ள வேறுபாடு.
UPS vs NPS: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்ற சிறந்த பென்ஷன் திட்டம் எதுவாக இருக்கும்?

மத்திய ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS ) ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. யுபிஎஸ் திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு உத்திரவாத ஓய்வூதியம் வழங்கப்படும். அதாவது, இந்த ஓய்வூதியத் திட்டம், குறிப்பாக ஓய்வுக்குப் பிறகு உத்திரவாத வருமானத்தை விரும்பும் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள், இப்போது NPS அல்லது UPS இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். 

Add Zee News as a Preferred Source

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) 2004ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. NPS திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்தத் திட்டம் பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்டிருந்தது தான் இதற்கு முக்கிய காரணம். 2009 ஆம் ஆண்டில், அரசாங்கம் இந்தத் திட்டத்தை தனியார் துறை ஊழியர்களுக்கும் அறிமுகப்படுத்தியது. 

UPS திட்டத்தின் கீழ், மத்திய ஊழியர்கள் ஒரு உத்திரவாத ஓய்வூதியத்தைப் பெறுவார்கள், இது அவர்களின் ஓய்வுக்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளத்தில் 50%, அதாவது அடிப்படை சம்பளத்தில் பாதியாக ஓய்வூதியம் இருக்கும். அதேசமயம் NPS திட்டத்தில் ஓய்வூதியத் தொகை சந்தையில் இருந்து பெறப்பட்ட வருமானத்தைப் பொறுத்தது.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, மத்திய அரசு ஊழியர்கள் NPS அல்லது UPS ஆகிய இரண்டில் இருந்து ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஓய்வூதியத் திட்டமிடலுக்கு எந்த விருப்பம் சிறந்தது என்பதைப் புரிந்து கொள்ள, முதலில் இரண்டையும் ஒப்பிட்டு அறிந்து கொள்ளலாம்.

யுபிஎஸ் மற்றும் என்பிஎஸ் இடையே உள்ள வேறுபாடு

1. அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 10% தொகையை UPS மற்றும் NPS இரண்டிற்கும் பங்களிக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் பங்களிப்பு NPS திட்டத்தில் 14% ஆகவும், UPS திட்டத்தில்18.5% ஆகவும் இருக்கும்.

2. யுபிஎஸ் திட்டத்தில் 25 ஆண்டுகள் சேவையை முடித்த பிறகு, ஊழியர்கள் தங்கள் கடைசி சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத உத்திரவாத ஓய்வூதியத்தையும், ஒரு மொத்தத் தொகையையும் பெறுவார்கள். இது மட்டுமல்லாமல், பணவீக்க விகிதத்திற்கு ஏற்ப ஓய்வூதியமும் அதிகரிக்கப்படும். அதேசமயம் NPS திட்டத்தில் இந்த இரண்டு நன்மைகளும் இல்லை.

NPS திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் 

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) பல வரிச் சலுகைகள் உட்பட பல சலுகைகளையும் வழங்குகிறது. பங்குகள், அரசு பத்திரங்கள் மற்றும் பெருநிறுவனக் கடன் போன்ற பல்வேறு சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம், NPS சந்தாதாரர்களுக்கு ஓய்வூதியத்திற்காக ஒரு பெரிய நிதியை உருவாக்க உதவும். ஆம், ஓய்வுக்குப் பிறகு முன்னரே தீர்மானிக்கப்பட்ட நிலையான ஓய்வூதியத் தொகைக்கு NPS எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது என்பது உண்மைதான், ஏனெனில் இது ஒரு முதலீடு சார்ந்த ஓய்வூதியத் திட்டமாகும், இதில் உங்கள் பங்களிப்பு சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

ஊழியர்களிடையே ஓய்வூதிய சேமிப்பை ஊக்குவிப்பதற்காக NPS அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, திட்டத்தில் பங்கேற்பதை ஊக்குவிக்க, NPS பங்களிப்புகளுக்கு பல்வேறு வரிச் சலுகைகள் கிடைக்கின்றன:

1. NPS திட்டத்தில் முதலீடு செய்வது பிரிவு 80C-யின் கீழ் விலக்கு அளிக்கும் பலனை வழங்குகிறது, இதன் வரம்பு ரூ.1.5 லட்சம்.

2. NPS திட்டத்தில் முதலீடு செய்வது பிரிவு 80CCD (1B)-இன் கீழ் வரி விலக்கு பெறவும் உங்களுக்கு உரிமை அளிக்கிறது. அதாவது, 80C இன் கீழ் கிடைக்கும் சலுகைகளைத் தவிர, இந்தப் பிரிவின் கீழ் ரூ.50,000 விலக்கும் கிடைக்கிறது. இந்த வழியில் உங்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும்.

3. NPS முதலீடுகள் பிரிவு 80CCD(2) இன் கீழ் வரிச் சலுகைகளையும் வழங்குகின்றன. இந்தப் பிரிவின் கீழ், ஒரு முதலாளி தனது பணியாளரின் NPS கணக்கில் பங்களித்தால், அந்த ஊழியருக்கு வரி விலக்கு கிடைக்கும். பிரிவு 80C தவிர, இந்தப் பிரிவின் பலனையும் நீங்கள் பெறுவீர்கள்.

4. NPS திட்டத்தில் இருந்து பணம் எடுப்பதில் விலக்கு - ஒரு வரி செலுத்துவோர் தனது NPS கணக்கை மூடும்போது அல்லது NPS திட்டத்திலிருந்து வெளியேறும்போது, ​​NPS அறக்கட்டளையிலிருந்து பெறப்பட்ட மொத்தத் தொகையில் 60% வரை வரி விலக்கு அளிக்கப்படும், மீதமுள்ள 40% வரி விதிக்கப்படும்.

NPS மற்றும் UPS இரண்டில் எது சிறந்தது?

NPS மற்றும் UPS இரண்டிற்கும் வெவ்வேறு நன்மைகள் மற்றும் அம்சங்கள் இருப்பதால், இரண்டிற்கும் இடையே சிறந்த ஓய்வூதியத் திட்டம் எது என்பதைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமாகிறது. NPS மற்றும் UPS இரண்டையும் ஒப்பிடும் போது, ​​அவற்றின் மீது விதிக்கப்படும் வரிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

1. முதிர்வு காலத்தில் NPS மீதான வரி: ஓய்வு பெறும்போது, ​​திரட்டப்பட்ட கார்பஸில் 60% திரும்பப் பெறலாம், மேலும் இந்தத் தொகைக்கு வரி விலக்கு உண்டு. மீதமுள்ள 40% ஆண்டுத்தொகையை வாங்கப் பயன்படுகிறது, மேலும் இந்த ஆண்டுத்தொகையிலிருந்து கிடைக்கும் வருமானம் தனிநபரின் வருமான வரி அடுக்கின்படி வரிக்கு உட்பட்டது.

2. யுபிஎஸ் முதிர்வு மீதான வரி: யுபிஎஸ் ஒரு உத்தரவாதமான ஓய்வூதியத்தை வழங்குகிறது, இது தனிநபரின் வரி அடுக்கின்படி வரிக்கு உட்பட்டது. இந்தத் திட்டத்தில் ஓய்வூதியத்தின் போது ஒரு மொத்தத் தொகையைப் பெறுவதும் அடங்கும், ஆனால் அதற்கு எவ்வாறு வரி விதிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

3. UPS திட்டத்தின் இரண்டு அம்சங்கள் மத்திய அரசு ஊழியர்களை ஈர்க்கக்கூடும். ஒன்று உத்திரவாத வருமானம், ஏனென்றால் மக்கள் ஓய்வு காலத்தில் நிலையான வருமானத்தை விரும்புகிறார்கள். இந்தத் திட்டத்தின் இரண்டாவது பெரிய அம்சம் என்னவென்றால், பணவீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியமும் காலப்போக்கில் அதிகரிக்கும், ஆனால் இந்த வசதி NPS ஓய்வூதியத்தில் இல்லை. 

4. ஓய்வூதியத்துடன், அகவிலைப்படியும் மிகவும் முக்கியமானது. இது இல்லை என்றால், பணவீக்கம் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே இருக்கும், ஆனால் ஓய்வூதியம் அப்படியே இருக்கும். இந்த நன்மைகளைப் பார்க்கும்போது, ​​பல மத்திய ஊழியர்கள் UPS திட்டத்தைத் தேர்வுசெய்யக்கூடும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க | CGHS புதிய விதிகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் முக்கிய மாற்றங்கள், விவரம் இதோ

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.... அட்டகாசமான ஊதிய, ஓய்வூதிய உயர்வு

மேலும் படிக்க | ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்கள் கவனத்திற்கு! மே 1 முதல் அதிகரிக்கும் கட்டணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News