NPS to UPS: 50% ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஏகப்பட்ட நன்மைகள்... மாறுவதற்கான வழிமுறை இதோ

UPS Latest News: ஏப்ரல் 1, 2025 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இதன் நன்மைகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 12, 2025, 03:40 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை.
  • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
  • இதில் யார் பதிவு செய்யலாம்?
NPS to UPS: 50% ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஏகப்பட்ட நன்மைகள்... மாறுவதற்கான வழிமுறை இதோ

Unified Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1, 2025 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய ஓய்வூதிய கட்டமைப்பை வழங்குகிறது. தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், அரசாங்க பங்களிப்புடன் ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது.

Add Zee News as a Preferred Source

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை

நீண்ட காலமாக தேசிய ஓய்வூதிய அமைப்பை (National Pension System) நிறுத்தி பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த இரு திட்டங்களின் முக்கிய அம்சங்களை இணைத்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

UPS: இதில் யார் பதிவு செய்யலாம்?

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), UPS-ன் கீழ் தகுதியுள்ள ஊழியர்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது:

- தற்போதுள்ள ஊழியர்கள்: ஏப்ரல் 1, 2025 அன்று மத்திய அரசுப் பணியில் இருப்பவர்கள் மற்றும் NPS இன் கீழ் உள்ள ஊழியர்கள்.
- புதிய ஊழியர்கள்: ஏப்ரல் 1, 2025 க்குப் பிறகு மத்திய அரசு பணிகளில் சேரும் ஊழியர்கள்.
- ஓய்வு பெற்ற ஊழியர்கள்: மார்ச் 31, 2025 அன்று அல்லது அதற்கு முன்பு NPS இன் கீழ் ஓய்வு பெற்றவர்கள். இதில் தன்னார்வ ஓய்வு பெற்றவர்களும் அடங்குவர்.

ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள் யுபிஎஸ்ஸில் சேரத் தகுதியுடையவர்கள். புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் சேர்ந்த 30 நாட்களுக்குள் இதில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள NPS சந்தாதாரர்களுக்கு ஏப்ரல் 1, 2025 முதல் மூன்று மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Pension: யுபிஎஸ் கீழ் ஓய்வூதிய சலுகைகள்

சேவை காலத்தின் அடிப்படையில் ஓய்வூதிய கட்டணத்தை UPS உறுதி செய்கிறது:

- 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக் காலத்தைக் கொண்ட ஊழியர்கள் கடந்த 12 மாதங்களுக்கான சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50% தொகையை ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.

- 10 முதல் 25 ஆண்டுகள் வரை பணியாற்றும் ஊழியர்களுக்கு விகிதாசார ஓய்வூதியம் கிடைக்கும்.

- குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிக்காலம் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.10,000 குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறது.

- ஓய்வூதியதாரர் இறந்தால், அவரது மனைவிக்கு ஓய்வூதியத் தொகையில் 60% நிதி உதவியாகப் கிடைக்கும்.

How to Migrate From NPS to UPS? NPS இலிருந்து UPS க்கு இடம்பெயர்வது எப்படி?

- NPS இலிருந்து UPS க்கு மாற விரும்பும் ஊழியர்களுக்கான இடம்பெயர்வு செயல்முறை இப்போது மத்திய பதிவு வைத்தல் முகமை (CRA) போர்ட்டலில் நேரலையில் உள்ளது - 
- https://www.npscra.nsdl.co.in/ups.php என்ற தளத்தில் சென்று இந்த செயல்முறையை மேற்கொள்ளலாம்.
- ஆன்லைன் முறையைத் தவிர, ஊழியர்கள் தங்கள் இடம்பெயர்வு கோரிக்கையை நேரடி படிவம் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.
- தற்போதுள்ள NPS சந்தாதாரர்கள் UPS-ஐத் தேர்வு செய்ய ஜூன் 30, 2025 வரை அவகாசம் உள்ளது.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு சூப்பர் திட்டம்: வட்டியில் மட்டும் ரூ.20,500 மாத வருமானம், ஏகப்பட்ட நன்மைகள்

மேலும் படிக்க | தனியார் துறை ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்: ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்... எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News