ஏடிஎம்மில் மின்சார கட்டணம் கட்டலாம்! தெரிந்து கொள்ளுங்கள்

S.Karthikeyan
Mar 25,2024
';


ஏடிஎம் என்பது பணம் எடுக்கும் ஒரு இயந்திரம் என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால், பணம் எடுப்பதைத் தவிர, அதை மேலும் பலவிதங்களில் பயன்படுத்தலாம் என்பது பலருக்கும் தெரியவில்லை.

';


அதுமட்டுமின்றி வங்கிக்கு நேரடியாக போகாமலேயே, வங்கிச் சேவைகளை ஏ.டி.எம்களிலேயே பெறலாம். பணத்தை வேறொரு கணக்குக்கு மாற்ற விரும்பினால், அதை ஏடிஎம்மிலிருந்து செய்யலாம்.

';


அதேபோல ஏடிஎம்மிலேயே மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம் போன்ற பல பில்களை செலுத்தலாம். இந்த வசதி எஸ்பிஐ உட்பட பல வங்கிகளின் ஏடிஎம்களில் கிடைக்கிறது. கிரெடிட் கார்டு பில்லையும் ஏடிஎம் மூலமாகவே செலுத்தலாம்.

';


பணத்தை எடுத்துக்கொண்டு உங்கள் வங்கிகணக்கில் டெபாசிட் செய்ய வங்கிக்கு போக வேண்டிய அவசியமும் கிடையாது. ஏடிஎம்களில் பணம் எடுப்பதை போன்றே, பணத்தை போட முடியும்.

';


பணம் டெபாசிட் செலுத்தும் இயந்திரங்கள் தற்போது பல்வேறு நகரங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பணம் டெபாசிட் செய்ய பலரும் விரும்புவது உண்டு.

';


ஆனால் பலரால் அது முடியவில்லை. எனவே நீங்கள் வெள்ளிக்கிழமை அன்றே பணம் டெபாசிட் செய்வதோ அல்லது ஏடிஎம்களில் எடுப்பதோ நல்ல வாய்ப்பாகும்.

';

VIEW ALL

Read Next Story