குஷியில் PF உறுப்பினர்கள்: அதிக ஓய்வூதியம் கிடைக்கும்... விதிகளில் மாற்றம்

';

PF உறுப்பினர்கள்

PF உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. EPFO ஓய்வூதியத் திட்டத்தின் விதிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன,

';

இபிஎஃப்ஓ

இபிஎஃப்ஓ ஓய்வூதியத் திட்ட விதிகளில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் தெரிவித்தார்.

';

இபிஎஃப் உறுப்பினர்கள்

இதன் கீழ், இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) PF கணக்கில் டெபாசிட் செய்யப்படும் மொத்தத் தொகையையும் ஓய்வூதியமாக மாற்றிக்கொள்ளும் வசதியை வழங்குவதற்கான வாய்ப்பை பற்றி ஆராயப்பட்டு வருகின்றது.

';

EPFO Pension Scheme

ஒரு ஊழியர் தனது இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்யப்பட்ட தொகை முழுவதையும் ஓய்வூதிய நிதியாக மாற்ற வேண்டும் என்று விரும்பினால் இப்படிப்பட்ட வசதி அவருக்கு உதவும்.

';

இபிஎஃப் சந்தாதாரர்கள்

இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) இந்த வசதியை அளிக்க இதை அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. கூடிய விரைவில், இதற்கான விதிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகின்றது.

';

EPS: ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம்

EPFO இன் கீழ், ஊழியர் மற்றும் நிறுவனம் என இரு தரப்பினரும் மாதா மாதம் PF கணக்கில் 12% தொகையை பங்களிக்கிறார்கள். நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திலும் (EPS), மீதமுள்ள 3.67% ஒவ்வொரு EPF கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுகிறது.

';

ஊதிய உச்ச வரம்பு

தற்போது ஓய்வூதியத்துக்கான அடிப்படை சம்பள வரம்பு 15,000 ஆக உள்ளது. இந்த சம்பள உச்ச வரம்பை (Wage Ceiling Hike) அதிகரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது.

';

EPFO போர்டல்

EPFO ​​போர்ட்டலை வங்கி இணையதளம் போல மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். இன்னும் ஆறு மாதங்களில் இதில் அதிக முன்னேற்றம் காணப்படும்.

';

VIEW ALL

Read Next Story