தனியார் துறை ஊழியர்களுக்கு EPFO அமைப்பின் ஒரு பகுதியான ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS-95) கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஊழியர்கள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை செய்திருந்தால், EPS பலன்களுக்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். ஓய்வூதியம் பொதுவாக 58 வயதுக்குப் பிறகு வழங்கப்படுகின்றது.
இபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போது ரூ.1,000 ஆக உள்ளது.
குறைந்தபட்ச EPS 95 ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.1,000-லிருந்து அதிகரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது.
குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்த்தப்படலாம் என கூறப்படுகின்றது.
தற்போதைய ஓய்வூதியம் அடிப்படை வீட்டுச் செலவுகளைச் சந்திக்கப் போதுமானதாக இல்லை என்று ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இபிஎஸ் ஓய்வூதிய உயர்வு குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ ஒப்புதலோ அல்லது அறிவிப்போ வெளியிடப்படவில்லை.
எனினும், இந்த முன்மொழிவு வரவிருக்கும் கொள்கை விவாதங்கள் அல்லது மத்திய பட்ஜெட்டின் போது மதிப்பாய்வு செய்யப்படலாம் என கூறப்படுகின்றது. குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கப்படால், அது ஊழியகர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.