)
EPFO Latest News: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) என்பது EPFO ஆல் நிர்வகிக்கப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். இது ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் முதன்மையாக இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் உள்ள ஊழியர்களை உள்ளடக்கியது. அதாவது ஒரு ஊழியர் ஒரு தனியார் துறையில் பணிபுரிந்து அவர் சம்பளத்திலிருந்து PF தொகை மாதா மாதம் கழிக்கப்பட்டால், அவர் இபிஎஸ் வரம்பிற்குள் வருகிறார். பணி ஓய்வுக்குப் பிறகு, இந்தத் திட்டத்தின் கீழ் அவருக்கு மாத ஓய்வூதியம் கிடைக்கும்.
இபிஎஃப் உறுப்பினர்களாக இருக்கும் ஊழியர்களும் நிறுவனங்களும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை EPFக்கு பங்களிக்கின்றனர். ஊழியர்களின் பங்களிப்பு முழுவதும் இபிஎஃப் கனகிற்கு செல்கிறது. நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33 சதவீதம் (ரூ. 1,250 வரை) EPS-க்கு செல்கிறது. மாதத்திற்கு ரூ. 15,000 வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு அரசாங்கம் 1.16 சதவீதம் (ரூ. 174 வரை) சேர்க்கிறது.
EPFO உறுப்பினர்களாக இருந்து குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பங்களித்தவர்களுக்கு மட்டுமே EPS -இன் கீழ் ஓய்வூதியம் கிடைக்கும். 58 வயதில் பணி ஓய்வு பெறும்போது முழு ஓய்வூதியம் தொடங்குகிறது. 50 வயதில் ஓய்வு பெற்றால் முன்கூட்டியே ஓய்வூதியம் பெறும் வசதியும் உள்ளது. ஆனால் 58 வயதுக்கு முன் ஓய்வூதியம் பெற்றால், அது வருடத்திற்கு 4 சதவீதம் குறைகிறது.
தற்போதைய விதிகளின்படி, ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்:
இபிஎஸ் மாத ஓய்வூதியம் = (ஓய்வூதிய சம்பளம் × ஓய்வூதிய சேவை) / 70.
- EPFO இன் கீழ் கிடைக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 ஆகும்.
- அதிகபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500 ஆக உள்ளது.
- தற்போது, EPFO இன் கீழ் சம்பள வரம்பு ரூ. 15,000 ஆக உள்ளது.
- இது 2014 இல் ரூ. 6,500 ஆக இருந்தது.
- இந்த சம்பள வரம்பின் அடிப்படையில், ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் அதிகபட்ச ஓய்வூதியம் ₹7,500 ஆகும்.
- இது பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது: 15,000 × 35 / 70 = ₹7,500.
மேற்கண்ட கணக்கீடுகள், பணியாளர் தனது சேவைக் காலம் முழுவதும் ₹15,000 அடிப்படை சம்பளத்தைப் பெறுவார் என்று கருத்தின் அடிப்படையில் உள்ளன. நிறுவனத்தின் சம்பள திருத்தம் காரணமாக சம்பளம் மாறினால் அல்லது EPFO சம்பள வரம்பை திருத்தினால், ஓய்வூதியத் தொகை அதற்கேற்ப சரிசெய்யப்படும்.
உதாரணமாக, செப்டம்பர் 2014க்கு முன் ஊழியர்களுக்கு, EPFO -வின் சம்பள வரம்பு ₹6,500 ஆக இருந்தது. இதன் விளைவாக, சம்பள திருத்தத்திற்கு முந்தைய சேவை ஆண்டுகளுக்கான ஓய்வூதியம் ₹6,500 சம்பள வரம்பின் அடிப்படையில் கணக்கிடப்படும். 2014 திருத்தத்திற்குப் பிறகு பணியாற்றிய ஆண்டுகளுக்கு, ஓய்வூதியம் ₹15,000 என்ற புதிய சம்பள வரம்பின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
இபிஎஃப் ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆகையால் இதை அதிகரிப்பது பற்றி EPFO மற்றும் அரசாங்கம் பரிசீலித்து வருகின்றன.
நிறுவனங்களிடமிருந்து மாதாந்திர பங்களிப்பு தேவைப்படும் EPFO இன் கீழ் சம்பள வரம்பு தற்போது ரூ.15,000 ஆக உள்ளது. இது ரூ.30,000 ஆக இரட்டிப்பாக்கப்படலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. EPFO சம்பள வரம்பை ரூ.30,000 ஆக இரட்டிப்பாக்கினால், அதிகபட்ச ஓய்வூதியத் தகுதியும் தற்போதைய ரூ.7,500 இலிருந்து ரூ.15,000 ஆக அதிகரிக்கும்.
ஓய்வூதியத்தை இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடலாம்: ரூ.30,000 × 35 / 70 = ரூ.15,000.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ