Anand Srinivasan : தங்கம் விலை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருவதை அடுத்து, விலை குறையுமா என்பதை எதிர்பார்த்து மக்கள் காத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் ஒரு பதிலை கொடுத்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Anand Srinivasan : ஈரான் போர் காரனமாக, தங்கம் விலை பெரியளவில் கடந்த சில நாட்களாக ஏறாமல் இருக்கிறது. பின்னர், இது சீராக குறைந்து வந்தது. தற்போது ஒரு வார காலமாக தங்கத்தின் விலை மீண்டும் உயர ஆரம்பித்திருக்கிறது. இந்த தங்க விலை ஏற ஆரம்பித்ததில் இருந்து மக்கள் பலர் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசனின் கருத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். அதில் பலரது கேள்வி, “தங்க விலை ரூ.10,000த்திற்கு கீழ் போகுமா?” என்பதாக இருக்கிறது.
உயர்ந்த தங்க விலை!
இந்தியாவை பொருத்தவரை, நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய சேமிப்பாக இருக்கிறது. எப்போதும் அல்லாமல், கடந்த 2-3 ஆண்டுகளில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், பலர் தங்கம் வாங்க முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது 22 கேரட் கிராமிற்கு ரூ.14,060க்கும் மேல் விற்கப்பட்டு வருகிறது. சவரனுக்கு ரூ.1,12,480க்கு விற்பனை ஆகிறது.
போரால் ஏற்பட்ட மாற்றம்!
சில மாதங்களுக்கு முன்பாக, வளைகுடாவில் போர் வெடித்தது. இதனால், தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்தது. அவ்வப்போதும் குறைவது, அவ்வப்போது விலை ஏறுவது உள்ளிட்ட விஷயங்கள், இந்த போர் தொடங்கிய பின்பு நடந்தது. இதையடுத்து, பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை எப்படியிருக்கும் என்பது குறித்து பேசியிருகிறார். அப்படியே தங்கம் குறைந்தாலும் அது எந்த அளவிற்கு குறையும் என்றும் கூறியிருக்கிறார்.
ஆனந்த் சீனிவாசன் பேச்சு:
தங்க விலை குறித்து பேசிய ஆனந்த் சீனிவாசன், அமெரிக்காவில் ஏற்கனவே பணவிக்கம் 3.3%க்கு போய்விட்டதாக கூறினார். இதையடுத்து, அங்கு வட்டி விகிதம் ஏற்றப்படுமா என்கிற கேள்வியும் வருகிறது. இந்தியாவில் வட்டி ஏற்றப்பட்டாமல், அமெரிக்கா மட்டும் வட்டியை ஏற்றினால், இந்தியாவில் இருந்து பணம் வெளியே போக அதிக வாய்ப்பிருப்பதாக கூறினார். இதனால் வரப்போகும் காலம் இன்னும் கடினமான ஒன்றாக இருக்கலாம் என்றும், தங்கத்தின் விலை அதிகபட்சமாக சுமார் ரூ.100-200 குறையலாம் என்றும் கூரினார். போர் நின்ற பிறகு தங்கத்தின் விலை சட்டென உயரக்கூட ஆரம்பித்து விடும் என்றார்.
மீண்டும் பத்தாயிரத்திற்கு வருமா?
தங்கத்தின் விலை சுமார் ரூ.10,000க்கு கீழ் போகுமென சிலர் கூறுவதாகவும், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றும் கூறினார். அப்படியே போக வேண்டும் என்றாலும் இருவருக்கும் இடையேயான போர் பெரிதாய் வெடிக்க வேண்டும் என்றும், போர் நிறுத்தம் முடிந்து, மீண்டும் தாக்குதல் தொடங்கினால் அதற்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் மாண்டால், தங்கத்தின் விலை ரூ.12,500க்கு கூட செல்லும் என்றும் கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ