)
Bank Cheque Clearing Process: வங்கிகளில் பலருக்கும் செக்புக் இருக்கும். செக்புக் இல்லாதவர்கள் கூட ஏதோ ஒரு கட்டத்தில் ஒருவரிடம் இருந்து செக் ஒன்றை பெற்றிருப்பார்கள். அந்த செக்-ஐ தங்களின் வங்கியில் கொடுத்து, தங்களின் வங்கிக் கணக்கில் வரவும் வைத்திருப்பார்கள். செக்கை வாங்கி, அதை வங்கியில் டெபாசிட் செய்து, அந்த தொகை உங்கள் கணக்கிற்கு வர ஓரிரு நாள்கள் எடுக்கும்.
தற்போது வங்கியில் CTS முறைப்படி செக்-ஐ சார்ந்த செயல்பாட்டை மேற்கொள்கின்றனர். அதாவது, இது வங்கிகளுக்கு இடையேயான காகித செக் பரிமாற்றத்தை தடுக்கிறது. செக்கை அப்படியே இருதரப்பு வங்கியும் பரிமாறிக்கொள்வதால் நேரம் அதிகம் எடுக்கும். இதனால், CTS முறையில் ஒரு செக்கின் டிஜிட்டல் புகைப்படத்தை ஒரு தரப்பு வங்கி, சம்பந்தபட்ட இன்னொரு வங்கிக்குக்கு அனுப்பும்.
உதாரணத்திற்கு, எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் உங்களிடம் கொடுக்கிறார்கள் என வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் இந்தியன் வங்கியில் சென்று செக்-ஐ டெபாசிட் செய்வீர்கள். அவர்கள் CTS செயல்பாட்டை தொடங்குவார்கள். நீங்கள் டெபாசிட் செய்த செக்கின் டிஜிட்டல் புகைப்படத்தை, நீங்கள் டெபாசிட் செய்த அன்றே இந்தியன் வங்கி இன்னொரு தரப்பான எஸ்பிஐ வங்கிக்கு அனுப்பும். இதுசார்ந்த செயல்பாடுகள் முடிந்ததும் ஒன்று, இரண்டு வேலை தினங்களில் பணம் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.
இது முந்தைய முறையை விட குறைவான நேரத்தையே எடுக்கிறது என்றாலும் பணத்தின் மீதான தேவை இருப்பதால் விரைவாக செக்கை செயல்படுத்தி பணத்தையும் விரைவாக கொடுக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் வேண்டுகோளாக இருந்தது. ஆர்பிஐயும் (RBI) இதுகுறித்த முக்கிய அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டுவந்தது. அதாவது, வங்கிகள் செயல்படும் அன்று காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை வங்கிகள் தங்களிடம் வரும் செக்-களையும் விரைவாக அந்தந்த வங்கிகளுக்கு டிஜிட்டல் புகைப்படமாக அனுப்ப வேண்டும் என்றும் எதிர்தரப்பும் விரைந்து செட்டில்மெண்டை முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நடைமுறை முதல் கட்டமாக வரும் அக்டோபர் 4ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக அடுத்தாண்டு ஜனவரி 3ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்பிஐ கொண்டுவந்துள்ள செக் சார்ந்த புதிய நடைமுறைகளின் அடிப்படையில், இனி செக் டெபாசிட் செய்த ஒரே நாளில் பணம் வரவு வைக்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) அறிவித்துள்ளது. அதே நேரத்தில், செக் எத்தனை மணிக்கு டெபாசிட் செய்யப்படுகிறது என்பதை பொருத்தே செக் அன்றே முடித்துவைக்கப்படுமா என்பது தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதன் வாடிக்கையாளர்களுக்கு ஐசிஐசிஐ வங்கி மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்மூலம், பணம் தேவைப்படும் நேரத்தில் கிடைக்கும், தாமதத்தை தவிர்க்கலாம். மேலும் தடங்கல் இல்லாத சேவைக்கு வங்கிக் கணக்கில் போதுமான இருப்பை பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ