)
சென்னை: தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே 'திருச்சி சூர்யா சிவா மற்றும் முக்தார்' விவகாரம் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அலிஷா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (Commissioner Office) நேரடியாகச் சென்று இருவர் மீதும் அதிரடியாகப் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அலிஷா, தமக்கு நேர்ந்த கொடுமைகளையும், மன உளைச்சல்களையும் விவரித்து ஆவேசமாகவும், கண்ணீருடனும் பேசியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அலிஷா பேசியதன் சுருக்கம் மற்றும் குற்றச்சாட்டுகளின் விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் தொகுக்கப்பட்டுள்ளன:
முக்கிய அம்சங்கள் |
விவரங்கள் (அலிஷாவின் குற்றச்சாட்டுகள்) |
| யார் மீது புகார்? | முக்தார் மற்றும் திருச்சி சூர்யா சிவா ஆகிய இருவர் மீது |
| புகாரின் முக்கிய காரணம் | பச்சிளம் குழந்தை மற்றும் பாஜாக தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை ஒப்பிட்டு அவதூறு பரப்பியது. |
| பாதிப்பின் காலம் | கடந்த 2 ஆண்டுகளாகவே அரசியல் ரீதியாக அவதூறுகள் மற்றும் கேவலமான பேச்சுகள். |
| நடப்பு விவகாரம் | 12 நாட்களுக்கு முன்பு வெளியான ஒரு வீடியோவில், அலிஷாவின் பச்சிளம் குழந்தையின் முகத்தையும், அண்ணாமலையின் புகைப்படத்தையும் வைத்து ஆபாசமாகச் சித்தரித்தது. |
| உடல் மற்றும் மனநிலை பாதிப்பு |
பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு (Postpartum Depression), ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் கடுமையான மூட் ஸ்விங்ஸ் (Mood Swings). |
|
அலிஷாவின் தற்போதைய முடிவு |
அவர்களை சும்மா விடமாட்டேன், சட்டப்படி சிறைக்கு அனுப்பும் வரை ஓயமாட்டேன். |
செய்தியாளர்களிடம் பேசிய அலிஷா, "நான் அரசியலுக்கு வந்ததில் இருந்தே கடந்த இரண்டு வருடங்களாக முக்தாரும், சூர்யா சிவாவும் என்னைப்பற்றி கேவலமாகப் பேசி வருகிறார்கள். 'குரைக்கும் நாய் கடிக்காது' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதைப்போல அவர்கள் தங்களின் டிஆர்பி (TRP) ரேட்டிங்கிற்காகப் பேசுகிறார்கள் என்று நான் இவ்வளவு நாட்களாகப் பொறுமையாக விட்டுவிட்டேன். ஆனால் 12 நாட்களுக்கு முன்னால் அவர்கள் எல்லையைத் தாண்டிவிட்டார்கள்" என்று குறிப்பிட்டார்.
"எனக்கு இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளது. அந்தப் பச்சிளம் குழந்தையை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்கள். ஒரு குழந்தையின் முகம் என் முகம் போல இருப்பதாகவும், இன்னொரு குழந்தையின் முகம் என் முகம் போல இல்லை என்றும் கூறி, அதோடு பாஜாக தலைவர் அண்ணாமலை சாரின் புகைப்படத்தை ஒட்டிப் போட்டுப் பேசியுள்ளார் சூர்யா சிவா. இதைப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? என்னைப்பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது?" என அலிஷா கொந்தளித்தார்.
குழந்தை பிறந்து இன்னும் சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், தமக்கு ஏற்பட்டுள்ள உடல்நல மற்றும் மனநல பாதிப்புகள் குறித்தும் அவர் உருக்கமாகப் பேசினார்.
"ஒரு பெண்ணிற்குப் பிரசவத்திற்குப் பிறகு 'போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷன்' (Postpartum Depression) எனப்படும் கடுமையான மனச்சோர்வு ஏற்படும். எனக்கும் இப்போது ஹார்மோன் சமநிலையின்மை (Hormonal Imbalance) மற்றும் மூட் ஸ்விங்ஸ் இருக்கிறது. நான் ஒரு ஸ்ட்ராங்கான பெண் என்பதால் இதைத் தாங்கிக் கொண்டு வந்து புகாரளித்துள்ளேன். எனக்குப் பின்னால் என் அம்மாவும், என் மாமியாரும், கணவர் வீட்டாரும் உறுதுணையாக நின்று 'நீ போய் தைரியமாகப் பேசு, வீடியோ பைட் கொடு' என்று அனுப்பினார்கள். ஒருவேளை என் குடும்பம் எனக்கு ஆதரவாக இல்லையென்றால் என் நிலைமை என்னவாகியிருக்கும்?" என்று கேள்வி எழுப்பினார்.
முக்தார் மற்றும் சூர்யா சிவா ஆகிய இருவருமே தம்மைக் கொஞ்சமும் மதிக்காமல் மிகக் கேவலமாகப் பேசியதாகவும், தற்போது தமது தொலைபேசி எண்களை பிளாக் (Block) செய்துவிட்டுத் தலைமறைவாக இருப்பதாகவும் அலிஷா தெரிவித்தார். மேலும் சூர்யா சிவாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், இன்னொரு பெண்ணைப் பற்றி இப்படி எப்படிப் பேச முடிகிறது என்றும் அவர் சாடினார்.
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில், சைபர் க்ரைம் போலீசாரும், உள்ளூர் போலீசாரும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பச்சிளம் குழந்தையை ஆபாச விவகாரத்தில் இழுத்திருப்பதால், இந்த விவகாரத்தில் சூர்யா சிவா மற்றும் முக்தார் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.