)
இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரம் என்று அழைக்கப்படும் திருப்பூர், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நகரின் முதல் டைடல் நியோ பூங்கா (Tidel Neo Park), அவிநாசி தாலுகா, ராக்கியாபாளையம் கிராமத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மினி ஐடி பூங்காவை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா திறந்து வைத்துள்ளார். இது, திருப்பூரின் தொழில் முகத்தை மாற்றுவதோடு, 650-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டைடல் நியோ பூங்கா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா, ராக்கியாபாளையம் கிராமத்தில் 1.77 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ரூ.39.44 கோடி மதிப்பீட்டில், தரைத்தளம் மற்றும் 7 மாடிகள் கொண்ட இந்த கட்டிடம், சுமார் 65,500 சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக செயல்படும்போது, 600-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். இதன் மூலம், உள்ளூர் திறமையாளர்கள் தங்கள் சொந்த பகுதியிலேயே வளரவும் வெற்றி பெறவும் வாய்ப்பு கிடைக்கும்.
#TamilNadu CM #MKStalin inaugurated yet another #TIDELNeo Park for Tamil Nadu today in #Tiruppur@CMOTamilnadu | @TNIndMin | @park_tidel | @TIDCO_1965
— TN Industrial & Investment Updates (@TnInvestment) August 11, 2025
pic.twitter.com/lns7iOtvRq
டைடல் நியோ என்பது, தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் (Tier 2 & Tier 3 cities) தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, அந்த பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் ஒரு தொலைநோக்கு திட்டமாகும். திருப்பூரின் இந்த புதிய டைடல் பூங்கா, நகரத்தின் வலுவான ஜவுளித் தளத்துடன், டிஜிட்டல் மாற்றத்தையும் இணைக்கும் ஒரு முக்கிய படியாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களில் டைடல் நியோ பூங்காக்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. வேலூர் மற்றும் காரைக்குடியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில், தற்போது திருப்பூரும் இணைந்துள்ளது.
இந்த திட்டம், திருப்பூரின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதோடு, படித்த இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகளை வழங்கி, பெருநகரங்களை நோக்கிய இடப்பெயர்வைத் தடுக்கும் ஒரு சிறந்த முன்னெடுப்பாக அமைந்துள்ளது. இந்த பூங்காக்களின் வெற்றி, பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தமிழகத்தின் சிறு நகரங்களை நோக்கி ஈர்த்துள்ளது. இந்த நிறுவனங்கள், தங்களின் கிளைகளை இங்கே அமைப்பதன் மூலம், உள்ளூர் திறமைகளை பயன்படுத்திக் கொள்வதோடு, உள்ளூர் பொருளாதாரத்தையும் வலுப்படுத்துகின்றன. அரசின் இந்த தொலைநோக்குத் திட்டம், தமிழ்நாட்டின் தொழில் வரைபடத்தை மாற்றி, ஒரு சமச்சீரான மற்றும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ