Ramadoss Health Update: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரத்தின் போது மயங்கிய நிலையில், ஆம்புலன்ஸில் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

Ramadoss Health Update Latest News: பாமக (ராமதாஸ்) - பாமக (அன்புமணி) என பாட்டாளி மக்கள் கட்சி உடைந்திருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 தேர்தல் களத்தில் பாமக (அன்புமணி) தேசிய ஜனநாயக கூட்டணியில் மாம்பழம் சின்னத்தில் 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மறுமுனையில், பாமக (ராமதாஸ்) திமுக, அதிமுக, தவெக என முன்னணி கட்சிகளுடன் கூட்டணி சேராமல் சசிகலாவின் அஇபுதமமுக உடன் ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார். சசிகலா - ராமதாஸ் கூட்டணி மொத்தம் 120 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சசிகலாவின் அஇபுதமமுக 71 தொகுதிகளிலும், பாமக சார்பில் 38 தொகுதிகளிலும், கூட்டணியில் உள்ள பிற அமைப்புகள் 11 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. இதில் சசிகலா தரப்பு 82 வேட்பாளர்கள் தென்னந்தோப்பு சின்னத்திலும், ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் சிலிண்டர் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
அந்த வகையில், சேலம் பள்ளப்பட்டி பகுதியில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் தனது வேட்பாளர் அருளை ஆதரித்து ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ராமதாஸுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள காவல் துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் குண்டுக்கட்டாக தூக்கி, ராமதாஸுக்கு முதலுதவி சிகிச்சையை வழங்கினர்.
சேலம் பள்ளப்பட்டியில் பாமக நிறுவனர் ராமதாஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு - மருத்துவமனையில் அனுமதி#ZeeTamilNews | #PMK | #Ramadoss | #Salem | #BreakingNews pic.twitter.com/M95vS4CxEJ
— Zee Tamil News (@ZeeTamilNews) April 12, 2026
தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் ராமதாஸ் மயக்கம் ஏற்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 21ஆம் தேதியோடு பரப்புரை நிறைவடைகிறது. கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. மார்ச் 30ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்றது. ஏப்ரல் 7ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது. ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுவை திரும்பபெற காலஅவகாசம் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்த முறை 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதியில் குறைந்தபட்சமாக 5 வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் - கொளத்தூர், துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான கே. பழனிசாமி - எடப்பாடி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - காரைக்குடி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் - பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதேநேரத்தில், ராமதாஸ், சசிகலா, அன்புமணி, டிடிவி தினகரன், அண்ணாமலை உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடவில்லை.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனித்து போட்டியிடும் சூழலில், இன்றில் இருந்துதான் அவரின் பிரச்சார பயணத்தை தொடங்கினார். நாளை (ஏப். 13) தருமபுரியில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்.16ஆம் தேதி கும்பகோணம்; ஏப். 17ஆம் தேதி காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம்; ஏப். 18இல் விருத்தாசலம், புவனகிரி, திட்டக்குடி; ஏப். 19இல் செய்யாறு, போளூர், கலசப்பாக்கம்; ஏப். 20இல் விக்கிரவாண்டி, செஞ்சி, கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட இடங்களில் ராமதாஸ் பிரச்சாரம் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரது பிரச்சாரம் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வியும் அவரது தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ