தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பிரச்சாரத்திற்காக திருப்பூர் சென்றிருந்தார். இந்த நிலையில், அங்கு 9 பேர் மற்றும் அத்தொகுதி வேட்பாளர் சுகுமாரும் மயக்கம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

TN Election News Tamil: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் மாவட்டம் வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 14) விஜய் திருப்பூரில் பிரச்சாரம் செய்தார்.
இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து சாலை வழியாக பிரச்சார வாகனத்தில் திருப்பூர் சென்றடைந்தார். இந்த நிலையில்தான், அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் விஜய்யை காண்பதற்காக காலை முதலே தவெக தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த சூழலில், ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்ட நிலையில், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், திடீரென தொடர்ச்சியாக மக்கள் மயக்கமடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மொத்தம் 9 பேர் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. கூட்டத்தில் உள்ளவர்களுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பலரும் மயக்கம் அடைந்தனர்.
விஜய்யை வரவேற்பதற்காக கோவை சூலூர் தாலுகா வேட்பாளர் சுகுமார் தங்கள் ஆதரவாளர்களுடன் காத்திருந்தார். இந்த சூழலில், கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கம் காரனமாக திடீரென வேட்பாளர் சுகுமார் மயக்கமடைந்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் அவரை உடனடியாக மீட்டனர். விஜய்யை பார்ப்பதற்காக சென்ற பொதுமக்கள் மற்றும் வரவேற்க காத்திருந்த வேட்பாளர் மயக்கம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சூழ்லில், விஜய் தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஏப்ரல் 14 திருப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதற்கு முன்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு ரோடு ஷோ செய்தார். விஜய் இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 20 சதவீதம் வரை வாக்குகளை பெறுவார் என்றும் குறிப்பாக இளைஞர்களின் வாக்குகளை அதிகம் பெறுவார் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!