தமிழகத்தில் தேர்தல் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிரசாரங்களும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் தேர்தல் பரப்புரை செய்வது தொடர்பாக மெட்ராஸ் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் பதிலை கோரியுள்ளது.
தமிழகத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இருவரும் ஒரே மேடையில் முதல் முறையாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், இதே பிரமாண்ட பொதுமேடையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக்கொள்கின்றனர்.
தேர்தல் நேரத்தில், தாக்குதல்களும், எதிர் தாக்குதல்களும், விமர்சனங்களும், விடாமல் துரத்தும் வீண் பேச்சுகளும் வழக்கமாக காணப்படுபவைதான். எனினும், சில சமயம் இவை எல்லை மீறும் வேளையில், மக்கள் சில தலைவர்களின் உண்மையான முகங்களைக் காண வாய்ப்பும் கிடைக்கிறது.
சென்னையின் அதிகம் பேசப்படும் தொகுதிகளில் ஒன்றான ஆயிரம் விளக்கு தொகுதி இம்முறையும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபலங்கள் போட்டியிடும் இந்த தொகுதியில் எப்போதுமே மக்களின் ஆர்வம் இருப்பது வழக்கம்.
தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகனும் வாரிசுமான உதயநிதி ஸ்டாலின் வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Puducherry Elections 2021: மார்ச் 30 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். ஏற்கனவே பிப்ரவரி 25 அன்று புதுச்சேரியில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
West Bengal Assembly elections 2021: இந்த மாதம் முதல் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கு முன்னதாக புருலியாவில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி (PM Modi rally in Purulia) உரையாற்றினார்.
தி.மு.க இந்த முறை ஆட்சியைப் பிடிக்கும் என்று ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்பு 2021 தெரிவித்துள்ளது. எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என ABP CVoter கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இது அதிமுக-பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக இருக்கலாம் என்று கூறுகிறது.
நடிகர் பிரபுதேவா தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல் தொடர்பாக பாடும் பாடல் ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தலில் அனைவரும், வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காஞ்சீபுரத்தில் பிரசாரம் செய்துக் கொண்டிருந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கமலஹாசனுக்கு காயம் ஏற்படவில்லை. கார் சிறிது சேதமடைந்தது. தாக்குதலை அடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள், தாக்குதல் நடத்தியவரை ரத்தம் வருமளவு அடித்தனர்.
தேர்தல் பல நாட்கள் நடைபெற்றாலும் அதன் முக்கியமான நிகழ்வு வாக்குப் பதிவு தான். நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதைத் தவிர, வேறு வழிகளிலும் வாக்களிக்கலாம்.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாரத்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.