)
நம்மில் பலருக்கு நமது உடலை ஏதேனும் ஒரு வகையில் நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதாவது காலை எழுந்ததும் உடற்பயிற்சி மேற்கொள்வதோ, நடைபயிற்சிக்கு செல்வதன் மூலமோ அல்லது யோகா மூலமோ உடம்பை சீராக வைத்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால் அதற்கு சில மணி நேரங்கள் தேவை என நினைத்து நமது வேலைபளு காரணமாக அதனை செய்யாமல் தவிர்த்து வருகிறோம்.
இந்த நிலையில், நாள் ஒன்றுக்கு வெறும் 20 நிமிடங்கள் யோகாவிற்காக செலவழித்தாலே போதும். அதன் மூலம் நமது உடலை சீராக வைத்துக்கொள்ள முடியும். ஆனால் வெறும் 20 நிமிடம் செய்வதன் மூலம் நமது உடலை எப்படி ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள முடியும் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அது குறித்தே இத்தொகுப்பில் விரிவாக பார்க்க இருக்கிறோம்.
முதுமை என்பது ஒரே நாளில் நடந்துவிடுவதில்லை. அது முதலில் நமக்கு தெரியாத சிறிய மாற்றங்கள் மூலமே வெளிப்பட தொடங்குகிறது. படிக்கட்டுகளில் ஏறும்போது முன்பை விட சற்று அதிகமாக மூச்சு வாங்குவதை நீங்கள் கவனிக்கலாம். அதேபோல் தரையில் சம்மணமிட்டு அமர்வது முன்பை காட்டிலும் கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். இவை அனைத்துமே வயதாகும்போது ஏற்படும் இயல்பான மாற்றங்களே. இதை நினைத்து கவலை கொள்ள தேவையில்லை என மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
மருத்துவர்களின் கூற்றுபடி, தினமும் வெறும் 20 நிமிடங்களை யோகாவிற்காக ஒதுக்கினால், அது ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். மேலும், கடுமையாக உடற்பயிற்சி செய்வதை விட தினமும் தவறாமல் யோகா செய்தாலே போதுமானது என கூறுகிறார்கள்.
நேரமில்லை என்ற காரணத்தினால் உடற்பயிற்சியை தள்ளிப்போடுபவர்கள்தான் அதிகம். ஆனால், தொடர்ந்து செய்து வந்தால் குறைந்த நேர பயிற்சிகளும் நல்ல பலன்களை தரும்.
இந்த தாடாசனா யோகா மிகவும் எளிமையான ஒரு நேராக நிற்கும் நிலை. ஆனால் இது உடல் தோரணையை சீராக்கவும், கால்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. வயதாகும்போது அவசியமான உடலின் சமநிலையை மேம்படுத்த இது பெரிதும் உதவும்.
அமர்ந்த நிலையில் செய்யப்படும் இந்த பயிற்சி, உங்கள் முதுகெலும்பை நேராக்கி, தோள்கள் மற்றும் உடலின் மேல் பகுதியை தளர்த்துகிறது. கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு இது யோகாசனம் மிகவும் நல்லது. இது கைகள் மற்றும் தோள்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு, ஆழமாக சுவாசிக்கவும் உதவுகிறது.
இந்த ஆசனம் கால்கள், இடுப்பு மற்றும் வயிற்று பகுதி தசைகளை வலுப்படுத்துகிறது. இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் வயதானாலும் முட்டிவலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் வராமல் தவிர்க்க முடியும்.
மற்ற ஆசனங்களை போல் இல்லாமல் இந்த யோகாசனம் ஒரு நடைப்பயிற்சி ஆகும். ’8’ வடிவத்தில் மெதுவாக, மூச்சை கவனித்து நடப்பதே இப்பயிற்சி ஆகும். இது உடலின் ஒருங்கிணைப்பு, சமநிலை மற்றும் நமது கவன நிலையை மேம்படுத்தும்.
இது ஒரு எளிய பயிற்சியே ஆனால் இதன் பலன்கள் அதிகம். மெதுவாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதி விரியுமாறு ஆழமாக சுவாசிப்பதே இதன் முறை ஆகும். இது நுரையீரலின் திறனை மேம்படுத்தி, அழுத்தத்தையும் நீக்கி நிம்மதியை தரும்.