)
நேபாளத்தை பின்புலமாக கொண்டு, இந்திய சினிமாவிற்குள் நுழைந்தவர், மனிஷா கொய்ராலா. இவர், தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பின்பு, தற்போது மனிஷா கொய்ராலா 55 வயதிலும் ஃபிட் ஆக இருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
மனிஷா கொய்ராலா தமிழில் பம்பாய், இந்தியன், ஆளவந்தான், முதல்வன், பாபா, உயிரே உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். பின்னர் தமிழில் கடைசியாக16 வருடங்களுக்கு முன்பு தனுஷுக்கு மாமியாராக ‘மாப்பிள்ளை’ படத்தில் நடித்திருன்ஹார். இவருக்கு, 2012ஆம் ஆண்டில் கருப்பை வாய் புற்றுநோய், நான்காம் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சைக்கு பிறகு, இவர் 2014ஆம் ஆண்டில் அதிலிருந்து மீண்டதாக கூறப்படுகிறது.
மனிஷா கொய்ராலா, முன்னதாக தனது புற்றுநோய் குறித்தும், அதனுடனான போராட்டம் குறித்தும் பேட்டிகளில் பேசியிருக்கிறார். அப்போது, புற்றுநோயுடன் போராடிய தனக்கு, கடவுளின் அருளால் 2வது வாழ்க்கை கிடைத்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், வாழ்க்கையில் தான் ரொம்பவே அடி வாங்கி, தவறான முடிவுகளை எடுத்து, அது தனக்கு நல்ல பாடங்களை கற்றுக்கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.
மனிஷா கொய்ராலா, கடந்த சில நாட்களாகவே ஃபிட்னஸ்ஸில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இவர், தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும், போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார். இது குறித்து பேசிய அவர், ஜிம்மிற்கு செல்வது என்பது வெறும் உடலமைப்பை மாற்றுவது மட்டுமல்ல என கூறுவதோடு, மனதிற்கு தெளிவையும் ஒழுக்கத்தையும் மனதிற்கான சமநிலையையும் தருவது என்றும் கூறியிருக்கிறார். இதனால்தான், ஃபிட்னஸிற்கு தான் முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்வதாக கூறியிருக்கிறார்.
உடற்பயிற்சிகள் செய்வதை குறித்து பேசும் மனிஷா கொய்ராலா, ஆரோக்கியமான பழக்கவழக்கம் என்பது தொடர்ந்து நல்ல பழக்கங்களை மெயிண்டெயின் செய்வதில்தான் இருக்கிறது என கூறும் அவர், அதை பர்ஃபெக்ட் ஆக செய்வதில் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இது குறித்து தான் வெளியிடும் பதிவுகளிலும் கூட, சில நாட்கள் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் இறங்குவதாகவும், ஒரு சில நாட்களில் உடற்பயிற்சியே செய்யாமல் வெறுமென திரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், இப்படி செய்தாலும் ஏதோவொன்றை நம் உடலுக்கு பழக்கும் போதுதான் நமது உடலையும் மனதையும் நாம் மதிக்கிறோம் என்று அர்த்தம், என தெரிவிக்கிறார்.
மனதில் குழப்பமும், எதிர்காலம் குறித்த பயமும் ஏற்படும் போதெல்லாம், தான் யோகா மற்றும் தியானத்தின் மூலமாக அமைதியை நாடுவதாக மனிஷா தெரிவித்துள்ளார்.மேலும், யோகாவை ஒரு உடற்பயிற்சியாக மட்டும் பார்க்காமல் அதனால் தன்னை தானே புதுப்பித்துக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.