முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா என்ன... மாம்பழம் மிகவும் சுவையானது மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்கள் பல அடங்கியதும் கூட. இது ஆரோக்கியத்திற்கு பல வகையில் நன்மைகளை பயக்கக் கூடியது. எனினும் சில உணவுகள் சாப்பிட்டபின், அல்லது சில உணவுகள் சாப்பிடும் போது மாம்பழத்தை சாப்பிடுவது, உடல் நலத்தை பாதிக்கக்கூடும் என்று உணவியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
மாம்பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்
மாம்பழத்தில், இரும்பு சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்நிலையில் இதன் ஆரோக்கிய பலன்களை முழுமையாக பெற, அதனை சரியான முறையில் சாப்பிட வேண்டியது அவசியம். அதோடு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதோடு, இதன் ஊட்டச்சத்துக்களை உடல் பெற முடியாமல் (Health Tips) போய்விடும்.
மாம்பழத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடாத சில உணவுகள்
பப்பாளி
மாம்பழத்துடன் பப்பாளியை சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. வாந்தி குமட்டல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். அதோடு இது அலர்ஜி பிரச்சனையையும் தூண்டலாம். இதனால் சுவாசம் தொடர்பான உடல்நல கோளாறுகள் ஏற்படும் பாதிப்பு உண்டு.
குளிர்பானங்கள்
அப்பளம் சாப்பிட்ட பிறகு குளிர் பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். இதனால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். அதோடு, குளிர் பானங்களில் இருப்பதெல்லாம் சர்க்கரைகளும் பிசிர்வேட்டிர்களும் மட்டுமே. இதில் ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை. எனவே பொதுவாக இதனை தவிர்ப்பது நல்லது.
தயிர்
மாம்பழம் சாப்பிட்ட பின் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. தயிரும் மாம்பழமும் சேர்ந்த தயிர் லஸ்ஸி போன்ற பானங்களை பலர் அருந்துகின்றனர் என்றாலும், இதனால் செரிமான பிரச்சனைகள், குடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாகற்காய்
கசப்பு தன்மை கொண்ட பாகற்காய், நீரழிவு முதல் பல விதமான உடல்நல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக உள்ளது. அதேபோன்று மாம்பழமும் எண்ணற்ற ஆரோக்கிய பலன்கள் நிறைந்தது சிறந்த பழம். ஆனால் பாகற்காய் சேர்த்த உணவுகளை சாப்பிட்ட பின் மாம்பழம் சாப்பிடுவதால், இரண்டு சிறந்த உணவுகளையும் நன்மைகளையும் பெற முடியாமல் போகலாம். அஜீரண கோளாறு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கக்கூடும்.
கார உணவுகள்
அதிக காரம் கொண்ட உணவுகளுடன், மாம்பழத்தை சேர்த்து சாப்பிடுவதால், செரிமான பிரச்சனைகள் உண்டாகும். இதனால் நெஞ்செரிச்சல், போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மாம்பழம் சாப்பிடுவதற்கான சரியான முறை
மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன், அதனை 30 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் உடலுக்கு அது சூட்டை கொடுக்காமல் இருக்கும். கோடைகாலத்தின் மிகச்சிறந்த பழமான மாம்பழத்தை இவ்வாறு சாப்பிடுவதால் ஆரோக்கிய பலன்களை முழுமையாக அடையலாம். அதோடு அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். எனவே அளவோடு சாப்பிடுவதால், அதன் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக பெறலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்க... ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சூப்பர் உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ