அதிகமாக கோபப்படுபவர்களுக்கு வரும் மாரடைப்பு, அறிகுறிகளும், முன்னெச்சரிக்கையும்

Heart health tips : அதிகமாக கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு வரும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், மாரடைப்பு வரும்போது தென்படும் அறிகுறிகளும், இதில் இருந்து தப்பிக்க  செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 30, 2025, 12:18 PM IST
  • கோபப்பட்டால் மாரடைப்பு வரும்
  • மருத்துவர்கள் கொடுக்கும் எச்சரிக்கை
  • கோபத்தை கட்டுப்படுத்த முக்கிய டிப்ஸ்
அதிகமாக கோபப்படுபவர்களுக்கு வரும் மாரடைப்பு, அறிகுறிகளும், முன்னெச்சரிக்கையும்

Heart health tips Tamil : நவீன வாழ்க்கையில் அழுத்தம், கோபம் மற்றும் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. வேலை, குடும்ப பிரச்சினைகள் அல்லது சமூக உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக கோபம் வருவது சகஜமாகிவிட்டது. ஆனால், அடிக்கடி கோபம் வருவது உங்கள் இதய ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கலாம் என்பதை அறிவீர்களா?. ஆம் அதிகமாக கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கோபம் இதய நோய் மற்றும் இதய அடைப்பு (Heart Attack) அபாயத்தை அதிகரிக்கும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம். 

Add Zee News as a Preferred Source

கோபம் எப்படி இதயத்தை பாதிக்கிறது?

கோபம் வரும்போது உடலில் அட்ரினலின் (Adrenaline) மற்றும் கார்டிசோல் (Cortisol) போன்ற ஹார்மோன்கள் வெளியாகின்றன. இவை இரத்த அழுத்தத்தை (BP) அதிகரிக்கின்றன. இதயத் துடிப்பை வேகமாக்குகின்றன. இது இதயத்தில் அதிக சுமையை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, இரத்த நாளங்கள் சுருங்கி இரத்த ஓட்டம் குறைகிறது. இரத்தம் கட்டியாகும் (Blood Clots) அபாயம் அதிகரிக்கிறது. இதயத் தசைகள் பலவீனமடைகின்றன. நீண்டகால கோபம் இதய நோய் மற்றும் இதய வலிப்பு வருவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது.

மருத்துவர்களின் எச்சரிக்கைகள்:

கோபம் ஒரு உணர்ச்சி மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள் ஏற்படலாம். உடற்பயிற்சி இல்லாதவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்கள் மற்றும் டயபெடிஸ் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.

கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

1. யோகா மற்றும் தியானம் - பிராணாயாமம், மெடிடேஷன் மனதை அமைதிப்படுத்தும். தினமும் 10-15 நிமிடம் மனதை ஓய்வு செய்யுங்கள்.

2. நேர்மறை சிந்தனை- எதையும் பொறுமையாக சிந்தியுங்கள். கோபத்தை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துங்கள். 

3. உடற்பயிற்சி - தினசரி 30 நிமிடம் நடத்தல், ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல் போன்றவை எண்டார்பின்களை (Endorphins) வெளியிடும், இது மன அழுத்தத்தை குறைக்கும்.

4. ஆழ்மூச்சு விடுங்கள் - கோபம் வரும்போது 10 முறை ஆழ்ந்த மூச்சிழுத்து வெளியிடுங்கள், இது உடலை ஓரிரு நிமிடங்களில் அமைதிப்படுத்தும்.

5. போதுமான உறக்கம் - 7-8 மணி நேரம் தூக்கம் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

எனவே, கோபத்தை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான இதயத்துடன் வாழுங்கள்...

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கொளுத்தும் கோடை வெயிலில் வியர்க்குரு வராமல் இருக்க உடனே இதைச் செய்யுங்கள்...!

மேலும் படிக்க | கொளுத்தும் வெயிலை சமாளிக்க தினமும் இந்த ஒரு பானம் மட்டும் குடியுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News