)
உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் கறிவேப்பிலையில், எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. பல நூற்றாண்டுகளாக, பல வகை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மூலிகையாக முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதன் அருமை தெரியாமல் நாம் அதனை தூக்கி எறிந்து விடுகிறோம்.
கறிவேப்பிலையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்
ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் என்று கறிவேப்பிலையை அழைக்கலாம். இதில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி, டி மற்றும் ஈ ஆகியவற்றோடு எண்ணற்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், அமினோ அமிலங்கள், கால்சியம் உள்ளிட்ட கனிமங்கள் நிறைந்துள்ளன.
உடலின் நச்சுக்களை வெளியேற்றும் அற்புத இலை
உடலில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் வெளியேற்றும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டது. ரத்தத்தை சுத்தம் செய்து உடல் சுறுசுறுப்பாக இருக்க கறிவேப்பிலை உதவும். இதனால் மூளையும் உடலும் புத்துணர்ச்சி (Health Tips) பெறும்.
உடலின் வீக்கத்தை போக்கும் ஆற்றல்
உடலில் ஏற்படும் வீக்கத்தினால் கடுமையான வலி உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கறிவேப்பிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வலிகளைப் போக்கி நிவாரணம் தரும்.
இதய ஆரோக்கியம்
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்களை தொடர்ந்து கேள்விப்படுகிறோம். இதற்கு கொலஸ்ட்ரால் மட்டுமல்ல, ட்ரைகிளசரைடுகள் அதிகரிப்பதும் ஒரு காரணம். கறிவேப்பிலை எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை எரிப்பதோடு, ட்ரைகிளிசரைடுகள் அளவையும் குறைக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் பாதிப்பு பெருமளவு குறைகிறது.
உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த உணவு
கறிவேப்பிலை வளர்ச்சியை மாற்றத்தை தூண்டி அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதனால் கொழுப்பு எரிக்கப்படுகிறது. அதோடு இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், செரிமான ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். உடல் எடை குறைய செரிமானம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாகும் கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் காணப்படும் அல்கலாய்டுகள் மற்றும் புலவன் நாயுடுகள், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகின்றன. இவை இன்சுலின் உணர்திறனையும் மேம்படுத்துவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கும்.
இரத்த சோகைக்கு மருந்தாகும் கருவேப்பில்லை
இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ள கறிவேப்பிலை, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகைக்கு மருந்தாக அமைகிறது.
கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளும் சரியான முறை
கறிவேப்பிலையின் மருத்துவ பண்புகளையும், ஊட்டச்சத்து நன்மைகளையும் முழுமையாக பெற, அதனை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம். கறிவேப்பிலை இலைகளை, நன்றாக கழுவி சுத்தம் செய்து, உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். வெதுவெதுப்பான நீரில் இதனை சிறிதளவு கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொள்வது நன்மை பயக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ