Natural Drinks For Diabetes: உலக அளவில் பல வாழ்க்கை முறை நோய்கள் மக்களை பாடாய் படுத்தி வருகின்றன. அவற்றில் நீரிழிவு நோய் மிக முக்கியமானதாக இருக்கின்றது. சமீப காலங்களில் நீரிழிவு பிரச்சனை மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. இது ஒரு கொடிய நோயாக மாறக்கூடும் என சுகாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
உடலில் இரத்த சர்க்க்ரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்பட்டால், உடல் பாகங்கள் சேதமடையத் தொடங்குகின்றன. நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகின்றது. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். சுகர் நோயாளிகள் கண்டிப்பாக தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை மட்டுமே நோயாளிகள் உட்கொள்ள வேண்டும். பல இயற்கையான வழிகளில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் 5 ஆரோக்கியமான ஆயுர்வேத பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் குடிக்கவும்
நீரிழிவு நோயாளிகளுக்கு, காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது நல்ல பலன்களை அளிக்கும். சர்க்கரைக்குப் பதிலாக, எலுமிச்சை நீரில் குறைந்த அளவில் தேனைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். எனினும், ஆயுர்வேத நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, இதை அருந்துவது நல்லது.
வெந்தய நீர்
வெந்தயத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. அவை இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகின்றன. சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, வடிகட்டி காலையில் குடிக்கலாம். இதை தொடர்ந்து உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
நெல்லிக்காய் சாறு
நெல்லிக்காய் வைட்டமின் சி யின் ஒரு களஞ்சியமாக கருதப்படுகின்றது. இதில் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ளன. தொடர்ந்து நெல்லிக்காய் உட்கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காய் உடலில் இன்சுலின் உற்பத்தியையும் ஊக்குவிக்கிறது. இதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இலவங்கப்பட்டை தேநீர்
இலவங்கப்பட்டையில் உள்ள தனிமங்கள் உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். இது இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்கும். இலவங்கப்பட்டை தேநீர் இலவங்கப்பட்டையை உடலில் சேர்க்க ஒரு எளிய வழியாக இருக்கும். இது தவிர பிற உணவு வகைகளிலும் இதை சேர்க்கலாம். சுவையை அதிகரிக்க, இலவங்கப்பட்டை தேநீரில் சில பிரிஞ்சி இலைகளையும் சேர்க்கலாம்.
காய்கறி சாறு
பச்சை காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் அவற்றில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளும் குறைவாக உள்ளன. உங்கள் சுவைக்கேற்ப கீரை, கேரட், வெள்ளரிக்காய் மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளின் சூப் செய்து காலையில் குடிக்கலாம். இவற்றை சாறாக அரைத்தும் உட்கொள்ளலாம். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். எடை இழப்பிலும் காய்கறி சூப் உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஆளி விதையில் ஒளிந்திருக்கும் ஆயிரம் நன்மைகள்... தினம் ஒரு ஸ்பூன் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









