)
வானிலை மாற்றம் காரணமாக அதிகரிக்கும் உடல் நல பிரச்சனைகளில் இருமல் மற்றும் சளி தொல்லை முதன்மை வகிக்கிறது. குறிப்பாக பலருக்கு வறட்டு இருமல் பிரச்சனை ஏற்படும். இதில், தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்ட உணர்வு ஏற்படும். ஆனால் சளி வெளியேறாது. இருமும்போது தொண்டை அதிக வலியும் இருக்கும். குறிப்பாக இரவில் இருமல் அதிகமாக இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட நபர் சரியாக தூங்க முடியாமல், சோர்வு பலவீனமும் பாடாய் படுத்தும். உங்களுக்கு இந்த வகையான பிரச்சனை இருந்தால், இந்த கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இரண்டே நாட்களில் வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் ஒரு பயனுள்ள வீட்டு வைத்தியத்தை (Health Tips) அறிந்து கொள்ளலாம். மிகவும் பயனுள்ள இந்த மருத்தை தயாரிக்கும் முறையை பிரபல ஆயுர்வேத ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ள தகவல்
தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், ஊட்டச்சத்து நிபுணர், வறட்டு இருமலைப் போக்க உதவும் கஷாயத்தை எவ்வாறு தயாரித்து குடிக்கலாம் என்று விளக்குகிறார்.
கஷாயத்தை தயாரிக்க தேவையான பொருட்கள்
2 துண்டுகள் இஞ்சி
3 அல்லது 4 கருப்பு மிளகு
2 துளசி இலைகள்
1/2 அங்குல துண்டு அதிமதுரம் மற்றும்
1 டீஸ்பூன் வெல்லம்.
கஷாயத்தை தயாரிக்கும் முறை
ஒரு கிளாஸ் தண்ணீரில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். இது பாதியாக வற்றும் வரை கொதிக்க விடவும். இந்த பானத்தை வடிகட்டி குடிக்கவும். ஊட்டச்சத்து நிபுணர் இந்த பானத்தை ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை குடிக்க அறிவுறுத்துகிறார்.
ஸ்வேதா ஷா காஷயம் குறித்து கூறுகையில், இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது தொண்டையின் வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்கிறது. கருப்பு மிளகு தொண்டையில் வறட்சி மற்றும் வலியைக் குறைப்பதன் மூலம் இருமலைத் தடுக்க உதவுகிறது.துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொண்டையை ஆற்றும். வெல்லம் தொண்டையில் ஈரப்பதத்தை கொடுக்கும்.
இந்த கஷயாத்தை நீங்கள் சரியாக முயற்சித்தால், வெறும் 2 நாட்களில் நீங்கள் நிறைய நிவாரணம் பெறலாம் என்கிறார் ஸ்வேதா ஷா. இந்த செய்முறை எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் வறட்டு இருமல் பிரச்சனையை நீக்க உதவும். இருப்பினும், இருமல் 1-2 வாரங்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவரை அணுகி ஆலோசிப்பது அவசியம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ