சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவும் கற்றாழை சாறு: இப்படி குடித்தால் அதிக பலன்

Benefits of Aloe Vera Juice in Diabetes: மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளுடன் சில இயற்கையான உபாயங்கள் மூலமாகவும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். அவற்றில் ஒன்று கற்றாழை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 14, 2024, 11:09 AM IST
  • நீரிழிவு நோயில் நன்மை பயக்கும்.
  • இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
  • வயிறு சுத்தமாக இருக்கும்.
சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவும் கற்றாழை சாறு: இப்படி குடித்தால் அதிக பலன்

Benefits of Aloe Vera Juice in Diabetes: சமீப காலங்களில் பல வித வாழ்க்கை முறை நோய்கள் மக்களை அதிகமாக ஆட்கொள்கின்றன. அவற்றில் நீரிழிவு நோய் மிக முக்கியமானதாக உள்ளது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் மிக அவசியமாகும். 

Add Zee News as a Preferred Source

மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளுடன் சில இயற்கையான உபாயங்கள் மூலமாகவும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். அவற்றில் ஒன்று கற்றாழை. கற்றாழை சாறு குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த செடியை வீட்டிலேயே வளர்க்கலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு இதில் இன்னும் பல நன்மைகளும் உள்ளன. பலர் சருமம் மற்றும் கூந்தலின் அழகை அதிகரிக்க கற்றாழையை பயன்படுத்துகிறார்கள். எனினும், அதிகமானோர் அதன் சாற்றை எடுத்து குடிப்பதில்லை. கற்றாழை சாறு குடிப்பதால் சுகர் நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Aloe Vera Juice: கற்றாழை சாறு செய்வது எப்படி?

முதலில், கற்றாழை இலையை உரித்து, அதிலிருந்து ஜெல்லை எடுத்து, நன்றாக அழுத்தி நசுக்கி கிரஷ் செய்து கலக்கிக்கொள்ளவும். இப்போது அதில் கருப்பு உப்பு, எலுமிச்சை மற்றும் கருப்பு மிளகு கலந்து சாறு தயார் செய்து குடிக்கவும். இதனை தொடர்ந்து குடிப்பதால் பல வகையான ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.

மேலும் படிக்க | அவித்த முட்டையா... ஆம்லேட்டா... காலை உணவில் எதை சாப்பிடலாம்? எதில் அதிக நன்மை?

நீரிழிவு நோயில் நன்மை பயக்கும் (Diabetes) 

நீரிழிவு நோயாளிகள் மற்றும் ப்ரீ டயபெடிக் நோயாளிகள் கற்றாழை சாற்றை குடிக்கலாம். இந்த பானம் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதை குடிக்கத் தொடங்கும் முன் மருத்துவரின் ஆலோசனையை பெற்று அதன் பிறகு அதை குடிக்க அறிவுறுத்தப்படுகின்றது.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது (Heart Health)

நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் அபாயம் சற்று அதிகமாக இருக்கும். கற்றாழை சாறு குடிப்பது இதற்கும் நன்மை பயக்கும். இதயத்தை பாதுகாக்க அவர்கள் கற்றாழை சாற்றை உட்கொள்ளலாம். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் மாரடைப்பு போன்ற கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும் பல ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன.

வயிறு சுத்தமாக இருக்கும் (Clean Stomach)

நீரிழிவு நோயாளிகள் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு, கற்றாழை சாற்றை தொடர்ந்து குடிக்கலாம். இதன் மூலம் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

உடலில் உள்ள நச்சுகள் நீங்கும் (Detox)

உடலில் அதிக அளவில் நச்சுகள் உருவானால், அது பல நோய்களை உண்டாக்கும். ஆகையால், நச்சுகளை அகற்றுவது மிக முக்கியம். கற்றாழை சாறு உடலை உட்புறமாக சுத்தம் செய்யும். தினமும் ஒரு டம்ளர் கற்றாழை சாறு குடித்தால் போதும், உடலில் உள்ள நச்சுகளை எளிதாக நீக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க உதவும் சைவ உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News