இன்றைய மோசமான வாழ்க்கை முறையினால், கடந்த சில காலங்களாக மாரடைப்பு, இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முதியவர்களைவிட இளைஞர்கள் தான் அதிக அளவில் மாரடைப்பினால் உயிரை இழக்கின்றனர் என்பது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும்.
நமது உடலில் நரம்புகள் மிக முக்கியமான செயல்பாட்டைக் கொண்டுள்ளன. நரம்புகள் நம் உடல் முழுவதும் பரவியுள்ளன. அவை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு இரத்தம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்க வேலை செய்கின்றன. நரம்புகள் நம் உடலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கு இதுவே காரணம். நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால், மாரடைப்பு உட்பட உடலில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படும்.
நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால், இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதன் காரணமாக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் உறுப்புகள் மற்றும் திசுக்களை அடைய முடியாமல் போகிறது. மோசமான வாழ்க்கை முறை, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, உடல் பருமன், புகைபிடித்தல் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற பல காரணங்கள் நரம்புகளில் அடைப்பு ஏற்படலாம்.
நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டால், உடலில் பல வகையான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். இந்நிலையில், இதற்கான அறிகுறிகளை அறிந்து கொள்வது, பல உயிர்களை காக்க உதவும்.
மார்பில் வலி அல்லது கனம்
நரம்புகளில் இரத்த ஓட்டம் தடைபடும் போது, மார்பில் வலி மற்றும் மார்பில் கனத்தை உணரலாம். ஆக்ஸிஜன் இதயத்தை அடைவதில் சிரமம் ஏற்படுவதன் காரணமாக மார்பின் நடுவில் வலியை உணரலாம். இந்த வலி லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். இப்படி உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
சுவாசிப்பதில் சிரமம்
இதய நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.அடைப்பு காரணமாக, முழுமையான ஆக்ஸிஜன் உடலை சென்றடைய முடிவதில்லை. இதன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சில உடல் செயல்பாடுகளைச் செய்த பிறகு இது அதிகமாக உணரப்படுகிறது.
சோர்வு மற்றும் பலவீனம்
நீங்கள் எந்த வேலையும் செய்யாமல் அதிக சோர்வு மற்றும் பலவீனத்தை உணர்ந்தால், இது நரம்புகள் அடைப்புக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். நரம்புகளில் அடைப்பு காரணமாக, இரத்தத்தை பம்ப் செய்ய அதிக முயற்சி எடுக்கிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட நபர் அதிக சோர்வாகவும், பலவீனமாகவும் உணரலாம். காரணமில்லாமல் அடிக்கடி அதீத சோர்வு அல்லது மயக்கம் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
மயக்கம்
நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட நபருக்கு மயக்கம் ஏற்படலாம். நரம்புகளில் அடைப்பு காரணமாக, ஆக்ஸிஜன் மூளையை அடையாத நிலை உண்டாகும். இதன் காரணமாக மயக்கம் ஏற்படலாம். காரணமில்லாமல் அடிக்கடி இப்படி மயக்கம் வந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சீரகம் முதல் ஏலக்காய் வரை... நலம் தரும் மசாலாக்களின் மருத்துவ பண்புகள்
மேலும் படிக்க | கை, கால்களில் தெரியும் இந்த புற்றுநோய் அறிகுறிகள்; புறக்கணிப்பது ஆபத்தானது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









