இனிப்புகளை அதிகம் சாப்பிடுவது சக்கரை வியாதியை ஏற்படுத்தும் என்று அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அதிக இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட காரணம் எண்ணற்ற உடல், மன மற்றும் உளவியல் பிரச்சனையால் இருக்கலாம். சர்க்கரை எடுத்துக்கொள்வது விரைவான ஆற்றலை வழங்குகிறது என்பது உண்மைதான் என்றாலும், அதிகமாக எடுத்து கொள்வது ஆழமான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று சமநிலையற்ற இரத்த சர்க்கரை நிலை ஆகும். உடலில் இரத்த சர்க்கரை அளவு மிக குறையும் போது, பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. மேலும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல்கள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | 36 கிலோவை கரைத்த பெண்; பிடிச்ச உணவுகளை சாப்பிட்டே எடையை குறைத்தது எப்படி?
சர்க்கரை சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது வழக்கம். இதனால் அவர்களுக்கு எப்போதும் இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு இருக்கும். இனிப்பு உணவுகளை அடிக்கடி உட்கொள்ள தூண்டும். ஆனால் இவர்களை தாண்டி உடலில் சில பிரச்சனைகள் இருந்தாலும் இனிப்பு சாப்பிட தூண்டும். எடுத்துக்காட்டாக அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற உணர்ச்சி நிலைகள் இருந்தால் அதிக இனிப்பு சாப்பிட தூண்டும்.
இது நமது பசியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக மன அழுத்தத்தின் போது, உடல் கார்டிசோலை வெளியிடுகிறது, இது இனிப்பு உணவுகளுக்கான பசியை கணிசமாக அதிகரிக்கும். இனிப்புகளை அதிகம் உட்கொள்வது டோபமைன் மற்றும் செரோடோனின் போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்களின் அளவை தற்காலிகமாக உயர்த்தலாம், இது விரைவான நிவாரணம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனவே, மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், யோகா, சுவாசப் பயிற்சிகள் மேற்கொள்வது அவசியம்.
அதிக இனிப்பு சாப்பிட மற்றொரு காரணம் போதிய தூக்கமின்மை ஆகும். இது பசி ஹார்மோன்களின் நுட்பமான சமநிலையை சீர்குலைக்கும், தனிநபர்கள் தங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்க விரைவான தீர்வாக சர்க்கரை பொருட்களை தேடுவதை நோக்கி தள்ளுகிறது. தூக்கமின்மை பசியை தூண்டும் ஹார்மோனின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும், அதே நேரத்தில் லெப்டினின் அளவு குறைகிறது. இதன் விளைவாக இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுகிறது.
கடைசியாக ஊட்டச்சத்து குறைபாடுகள், குறிப்பாக அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் குரோமியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் குறையும் போது சர்க்கரை உணவுகள் மீதான அதிக ஆசைக்கு பங்களிக்கும். இந்த ஊட்டச்சத்துக்கள் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதற்கும் இன்றியமையாதவை. உடலில் இந்த முக்கியமான கூறுகள் இல்லாதபோது, அது காணாமல் போனதை ஈடுசெய்யும் ஒரு வழியாக உள்ளுணர்வாக இனிப்புகளை விரும்பலாம்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஷில்பா ஷிரோத்கரின் தனிப்பட்ட அனுபவம் ஆகும். இதனை பின்பற்றும் மருத்துவ ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 22 கிலோவை குறைத்த 2 குழந்தைகளின் தாய்... உடல் எடையை குறைத்தது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









