ஆவி பிடிப்பதால் சளி, காய்சல், தலைவலிமட்டும் குணமடைவதில்ல; ஆவி பிடித்தால் சருமம் பொலிவு பெறுவதுடன் இளமையையும் தக்கவைக்கலாம் குறிப்புகள் உள்ளே!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமக்கு எந்த குடல்நல குறைவு ஏற்பட்டாலும் நம் வேட்டியில் உள்ள பெரியவர்கள் கூறும் ஒரே வார்த்தை ஆவி பிடி எல்லாம் சரியா போய்விடும் என்று கூறுவார்கள். சளி பிடித்தாலும் சரி, காய்ச்சல் அந்தாளும் சரி, ஏன் தலைவலியாக இருந்தாலும் கூட ஆவி பிடிக்க சொல்லுவார்கள். அதற்கான முழுமையான காரணம் தெரியாமலேயே நாம் அதை செய்வதற்கு யோசிப்போம். 


ஆவி பிடிப்பதால் சளி, காய்சல், தலைவலிமட்டும் குனமடைவதில்ல; ஆவி பிடித்தால் சருமம் பொலிவு பெறுவதுடன் இளமையையும் தக்கவைக்கலாம் என்று கூறினால் நம்ப முடிகிறதா?. ஆனால், அதுதான் உண்மை.  


ஆவி பிடிப்பதால் ஏற்படும் நமைகள்!!


> கரும்புள்ளி, வெண்புள்ளிகள் நீங்கும்: 


வெந்நீரில் ஆவி பிடிப்பதால், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும்.


> முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்: 


முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.


> முகப்பரு குறையும்: 


ஆவி பிடிப்பதால், முகத்தில் உள்ள பருக்கள் குறைய வாய்ப்புள்ளது. அதாவது, ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும். 


முகப்பரு இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், முகப்பரு உடைந்துவிடும். இதனால் முகப்பருவை சூப்பராக குறைத்துவிடலாம். 


> முதுமை தோற்றம் மறையும்: 


முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.


> முகம் பொலிவு பெரும்: 


ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும். ஆகவே நேரம் கிடைக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன உங்கள் முகத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.