Patanjali: பதஞ்சலி ஆயுர்வேதம், நவீன அறிவியலின் உதவியுடன் மக்கள் ஆரோக்கியத்தை புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. ஆனால் இதை புரிந்துகொள்ள, முதலில் அதன் பார்வை என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்வாமி ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா 2006ஆம் ஆண்டு பதஞ்சலியை நிறுவினர். அதன் பிரதான நோக்கம் ஆயுர்வேதத்தையும், யோகாவையும் நவீன அறிவியலுடன் இணைத்து வேலை செய்யும் ஒரு முறையை உருவாக்குவது. அதாவது, பழமையான இந்திய மருத்துவ முறைகளை அறிவியல் ஆய்வுகள் மற்றும் லாப் சோதனைகள் மூலம் சோதனை செய்ய வேண்டும். இதனால் இந்த முறை உலகளவில் நம்பகமானதாக மாறும்.
உலகளவில் சென்றடைந்த பதஞ்சலி
பதஞ்சலி பல நாடுகளுக்கு அதன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்துள்ளது. வெளிநாடுகளில் பல விலனஸ் மையங்களை திறந்துள்ளது. உதாரணமாக, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹியூஸ்டனில் பதஞ்சலி விலனஸ் சென்டர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் ஆயுர்வேத மசாஜ், ஆரோக்கிய ஆலோசனை மற்றும் தனிப்பட்ட சிகிச்சை திட்டங்கள் போன்ற சேவைகளைப் பெற முடியும்.
இதனால் அங்கு உள்ள மக்கள் இயற்கை மருத்துவ சிகிச்சை வழிகளுக்கு ஈர்க்கப்படுகிறார்கள். அதேபோல், பிரிட்டன், நேபால், கனடா மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளில் பதஞ்சலி யோகபீடத்தின் கிளைகள் உள்ளன. பாபா ராம்தேவின் பதஞ்சலி குழு, அவற்றின் தயாரிப்புகள் 200 நாடுகளில் விற்பனை செய்யப்படுவதாக கூறுகிறது.
மேலும், பதஞ்சலி ரிசர்ச் ஃபவுண்டேஷன் International Journal of Yoga மற்றும் BMC Research Notes போன்ற பல சர்வதேச அறிவியல் இதழ்களில் அதன் ஆராய்ச்சிகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி பத்திரிகைகளில் யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் நன்மைகளை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விற்பனை மற்றும் ஈ-காமர்ஸ் பிளாட்பார்ம்கள்
இதன் மேலாக, பதஞ்சலி தன் உலகளாவிய அளவில் பலதரப்பு மக்களிடம் சென்று சேர்வதற்கும், எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆன்லைன் விற்பனை மற்றும் ஈ-காமர்ஸ் பிளாட்பார்ம்கள் மூலம் கூட விற்பனை செய்து வருகிறது. தயாரிப்புகள் உலகம் முழுவதும் உள்ளவர்களை எளிதாக சென்றடைகிறது. குறிப்பாக, பாரம்பரியமான ஆயுர்வேத சிகிச்சைகள் மிகவும் பிரபலமாக இல்லாத நாடுகளில், மக்கள் இயற்கை மற்றும் முழுமையான ஆரோக்கிய வழிகளுக்கு ஈர்க்கப்படுகிறார்கள்.
சர்வதேச யோகா தினம் மற்றும் பதஞ்சலியின் பங்கு
ஜூன் 21ஆம் தேதி அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடுவது இந்திய அரசு மற்றும் ஸ்வாமி ராம்தேவின் மற்றும் பதஞ்சலி யோகபீடத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. ஸ்வாமி ராம்தேவ், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பெரிய யோகா முகாம்களை ஏற்பாடு செய்தார், இதனால் யோகாவுக்கு பரபரப்பாக ஆதரவு கிடைத்தது. 2015ஆம் ஆண்டு 177 நாடுகள் இணைந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியபோது, அதில் பதஞ்சலி முக்கிய பங்கு வகித்தது.
பதஞ்சலியின் யோகா எளிமையானது. அது பயனுள்ளதாகவும், அறிவியலின் அடிப்படையில் சரியானதாகவும் கருதப்படுகிறது. இதை யாரும் பணம் செலவிடாமல் கற்றுக் கொள்ள முடியும். ஒவ்வொரு நாளும் யோகா செய்யும்போது, மன அழுத்தம், மன சோர்வு, உடல் பருமன், இதய நோய்கள், நோய்காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியும்.
ஸ்வாமி ராம்தேவ் மற்றும் பதஞ்சலி, யோகா வெறும் பயிற்சியாக மட்டுமே அல்ல, அது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுவதற்கான அறிவியல் என உலகிற்கு காட்டினார்கள். இன்று யோகா இந்தியாவில் மட்டும் பிரபலமில்லை. அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் மிகப் பிரபலமாக உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









