)
நம் வீடுகளில், பல பழைய உணவுகள் ஏதேனும் இருப்பின் அதனை ஃப்ரிஜ்ஜில் வைத்து பின்னர் சூடு செய்து சாப்பிடும் பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கும். ஆனால் அப்படி செய்வதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா? இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
நம் வீடுகளில் மீதம் உள்ள உணவுகளை சூடு பண்ணுவது சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. ஏற்கனவே இருக்கும் உணவு வீணாக கூடாது எனும் எண்ணத்தோடும், ஏற்கனவே ஒரு உணவு இருக்கும்போது ஏன் புதிதாக இன்னொரு உணவை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடும் பலரும் உணவுகளை மீண்டும் சூடு செய்யும். இப்படி எல்லா உணவுகளையும் சூடு செய்வது, உடல் நலத்திற்கு ஆரோக்கியம் மற்றது என்பது உணவு பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கருத்தாக இருக்கிறது.
சில உணவுகளை மீண்டும் ஹீட் செய்யும்போது, பாக்டீரியா வளர்ச்சிக்கு அது வழி வகுப்பதோடு பிற உணவுகளின் ஊட்டச்சத்து கலவையும் மாறக்கூடும். ஒரு உணவை சரியாக சேமிக்கவில்லை என்றால் அது உணவு நன்றாக போகிற பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கலாம். ஒரு உணவை மீண்டும் சீர்படுத்தும் போது என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பவை அறிந்து கொள்வதும் அவசியமாகும்.
அரிசி சாதத்தை மீண்டும் சூடு படுத்துவது என்பது உகந்ததல்ல. ஒரு குண்டான் சாதத்தை நீண்ட நேரம் அரை விற்பனையில் வைத்திருக்கும் போது அதில் பாக்டீரியாக்கள் வளர தொடங்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக Bacillus Cereus என்னும் பாக்டீரியா அரிசி வேகமாக வளரும் பாக்டீரியா ஆகும். இவை உருவாக்கும் சிதைவுகள், இந்த உணவு மீண்டும் சூடுபடுத்திய பிறகும் முழுமையாக நீங்காது. இதுபோன்ற சாதத்தை சாப்பிடுவதால், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படலாம். அப்படி சாதத்தை மீண்டும் சூடு செய்ய வேண்டும் என்ற நினைத்தால், சாதம் வடித்து இரண்டு மணி நேரத்திற்குள் அதனை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது.
பச்சை இலை காய்கறிகள், கீரை, பீட்ரூட் உள்ளிட்ட கைகளில் ஏற்கனவே இயற்கையாக நைட்ரேட் இருக்கும். இதனை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும் போது நைட்ரேட் நன்றாக மாறலாம். இது அதிகப்படியாக மாறினால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான நிலையை உருவாக்கலாம். இதனால்தான், புதிதாக செய்யப்பட்ட பச்சை காய்கறிகளை சாப்பிடுமாறு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கோழிக்கறி போன்ற இறைச்சியை மீண்டும் சூடு படுத்துவதால் பல்வேறு அபாயங்கள் ஏற்படலாம். கோழிக்கறி போன்ற இறைச்சிகளின் ஏற்கனவே புரதம் நிறைந்துள்ளது. இவற்றை மீண்டும் சூடு படுத்தும்போது இந்த புராணங்களில் அமைப்பு மாறி செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மக்களே சரியான வெப்பநிலையில் சேமிக்கவில்லை என்றால் அது பாக்டீரியா வளர்ச்சிக்கும் வழிவகுக்கலாம். கோழிக்கறியை ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்து சூடு செய்து கொள்வது நல்லது.
கவனம்: மீண்டும் உணவுகளை சூடு செய்யும் போது ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து ஹீட் செய்தாலும் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். பாக்டீரியா தொற்ற அபாயத்தை குறைக்க, உணவை சூடு செய்து அவை நன்றாக சூடாக்குவது அவசியம்.