)
Harmless Daily Habits Dangerous Than Smoking : உலக மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பழக்கங்கள் இருக்காது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பழக்கம் இருக்கும். இருப்பினும், உடலை கெடுக்கும் பழக்கங்கள் கொண்டிருப்பவர்கள், தீய பழக்கங்கள் உடைவயர்கள் என்கிறோம். புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், துரித உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள் ஆகியோரை “இந்த தீய பழக்கங்களை வைத்துக்கொள்ளாதீர்கள்” என்று கூறி அட்வைஸ் செய்வோம்.
புகைப்பிடிப்பது ஏன் தீய பழக்கம்?
புகைப்பழக்கம், நமது ஆரோக்கியம், நிதி நிலை மற்றும் சமூகத்தில் வாழும் நிலை என அனைத்தையும் மாற்றவல்லது. இந்த பழக்கம், நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். அது மட்டுமன்றி, புகைப்பிடிப்பவர்கள் அடிக்கடி உடல் நிலை சரியில்லாத நிலைக்கு தள்ளப்படுவர். இதில் உபயோகிக்கும் நிக்கோடீன், ஒருவரை அந்த பழக்கத்திற்கு அடிமையாக்க வல்லது.
புகைப்பழக்கம், மனப்பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றை அதிகரிக்க உதவும். அது மட்டுமன்றி தினசரி சிகரெட் வாங்கி புகைப்பதால், சிலருக்கு நிதி சிக்கலும் கூட உண்டாகும். இந்த பழக்கம், மஞ்சள் கறை, வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உண்டாகலாம்.
புகைப்பழக்கத்தை விட ஆபத்தானது..
இந்த பழக்கம், வெளியில் இருந்து பார்க்கும் போது பெரிதாக கெட்ட பழக்கம் போல தெரியாது. ஆனால், இது அதைவிட ஆபத்தான பழக்கமாம். இந்த பழக்கம், புகைப்பழக்கத்தால் ஏற்படும் உயிரிழப்பை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துமாம். அது வேறு எந்த பழக்கமும் இல்லை. ஒரே இடத்தில், அமர்ந்து கொண்டு இருப்பதுதான்.
இது ஏன் ஆபத்து?
சில வருடங்களுக்கு முன்பு இது குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஒருவர் 6-8 மணி நேரம் தொடர்ந்து அமர்ந்து கொண்டே இருப்பவர்களுக்கு என்னென்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள், என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் கூட இதய நோய், சர்க்கரைனோய், புற்றுநோய், வயதாவதற்கு முன்பு உயிரிழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் தொடர்ந்து பல மணி நேரம் உட்கார்ந்துகொண்டே இருப்பதால், உடலில் ரத்த ஓட்டம் குறைந்து போகலாம். மேலும், ஆங்காங்கே ரத்தம் உறைதல் மற்றும் மூளை குறைவாக செயல்படுவது போன்ற பிரச்சனைகளும் எழுமாம்.
அதிகம் எழுந்து நடக்காமல் இருப்பதால், உடலில் மெட்டபாலிசம் குறைய வாய்ப்புள்ளது. இதனால், உடலில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் திறன்கள் குறைவதாக கூறப்படுகிறது.
மேலும் சில பயிற்சிகள்:
சரியான தூக்கமின்மை: மனிதர்கள் மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளுக்குமே தூக்கம் என்பது முக்கியம். மனிதர்களுக்கு தூக்கம் இல்லை என்றால், மனச்சோர்வு, உடல் எடை அதிகரித்தல், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
ப்ளூ லைட்:
நாம் உபயோகிக்கும் லேப்டாப், டேப், மொபைல் போன் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியேறும் ப்ளூ லைட் உங்கள் மூளையின் கெமிஸ்ட்ரியை சிதைக்க உதவும். பசிக்கும் போது மட்டுமல்லாமல், நினைக்கும் போதெல்லாம் எதையாவது சாப்பிடுவது, எதை சாப்பிடுகிறோம் என்பதை கவனிக்காமல் துரித உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது, உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கமாக மாறும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ